தருமபுரி, டிச.28- தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரி அதிய மான் அரசு பள்ளியில் புதனன்று நடை பெற்றது. இந்த பேரவைக்கு, மாவட்ட தலைவர் பெ.துரைராஜ் தலைமை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் கோ.பொற் கொடி வரவேற்றார். நிறுவனத் தலைவர் அ. மாயவன், மாநிலத் தலைவர் எஸ்.பக்த வாசலம், மாநிலப் பொருளாளர் சி.ஜெயக் குமார், மாநில துணை பொதுச்செயலாளர் எம்.சந்திரசேகர், முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தலைமை ஆசிரியர் கே.மணிவண்ணன் வாழ்த்துரையாற்றினார். நிலுவையில் உள்ள அகவிலைப்படி சரண்டர் விடுப்பு உடனடி யாக வழங்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். ஆசிரியர் களுக்கு பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் பி.பழனிச்சாமி நன்றி கூறி னார்.