திருப்பூர், மே 24- பல்லகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள சரவணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேவை யான ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி உடனடியாக ஆசிரியர் களை நியமிக்கும்படி இந்திய மாண வர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் ஊத்துக்குளி தாலுகா செயலாளர் கு.பாலமுரளி இது தொடர்பாக கல்வித் துறைக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், ஊத்துக் குளி தாலுகா, பல்லகவுண்டன்பா ளையம் பகுதியிலுள்ள சரவணபுரம் அரசுப்பள்ளி கடந்த 4 ஆண்டுக ளுக்கு முன்பு உயர்நிலையிலிருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த் தப்பட்டது. இப்பள்ளியில் 11 மற் றும் 12 ஆம் வகுப்புகளுக்கான கலை பிரிவில் கணக்கியல், வணி கவியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர் பணியி டங்கள் இன்னும் உருவாக்கப்படா மல் உள்ளது. இன்று வரை பெற் றோர் ஆசிரியர் கழகம் தான் இந்த 3 பாடங்களுக்கு ஒரு ஆசிரியருக்கு தலா ரூ.10ஆயிரம் என மூன்று ஆசிரி யர்களுக்கு மாதம் ரூ.30ஆயிரம் அளித்து வருகிறது. இந்த பாடப்பிரி வுகளில் தான் மாணவர்கள் அதிக மாக சேர்கின்றனர். ஏற்கனவே, பலமுறை பெற் றோர் ஆசிரியர் கழகம் மூலம் இந்த பிரச்சனை குறித்து கல்வித்துறை யிடம் முறையிட்டும் எந்தவித நடவ டிக்கையும் மேற்கொள்ளப் பட வில்லை. எனவே, மாநில அரசும், பள்ளி கல்வித்துறையும் உடனடி யாக தலையிட்டு இப்பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை உரு வாக்கி அரசு ஆசிரியர்களை பணிய மர்த்த வேண்டும் என இந்திய மாண வர் சங்க ஊத்துக்குளி தாலுக்கா குழு கேட்டுக் கொண்டுள்ளது. மழை நீர்த்தேக்கம் மேலும், கடந்த மே 12ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று பெய்த மழை காரணமாக பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளது. இதை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படா மல் உள்ளது. இனிவரும் காலங் களில் மழை நீர் தேங்காமல் இருக்க உரிய வடிகால் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் இந்திய மாணவர் சங்கம் கேட்டுக் கொண் டுள்ளது. இவ்விசயங்களில் கல்வித் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கா மல் இருக்கும் பட்சத்தில் போராட் டத்தில் ஈடுபடுவோம் என்றும் இந்திய மாணவர் சங்க ஊத்துக் குளி தாலுகா செயலாளர் கு.பால முரளி கூறியுள்ளார்.