100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி, சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் ரா.பிருந்தாதேவி செவ்வாயன்று, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு ராட்சத பலூனை பறக்கவிட்டார்.
நாமக்கல்,
கூட்டம் நடத்த...
பொதுக்கூட்டம் நடத்த அனு மதி கோருபவர்கள், 48 மணி நேரத்திற்கு முன்பாக, அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவ லருக்கு விண்ணப்பிக்க வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் ச.உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது, நாமக்கல் நாடாளு மன்ற பொதுத் தேர்தல் பொதுக் கூட்டம் நடத்தும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் கட்சியினர், வாகன அனுமதி மற்றும் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கோரு பவர்கள், 48 மணி நேரத்திற்கு முன்பாக, அந்தந்த உதவி தேர் தல் நடத்தும் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நாமக்கல்
5 ரூபாய் நாணயங்களால் வேட்புமனு
வரும் மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டிலுள்ள வேட்பாளர்கள், வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வகையான யுக்திகளை கையாண்டு வருகின் றனர். அந்தவகையில், கடந்த மார்ச் 20 ஆம் தேதி யன்று, நாமக்கல் மாவட்டம், பாலப்பட்டியைச் சேர்ந்த அகிம்சா சோஷலிஸ்ட் கட்சி வேட்பாளர் ரமேஷ் என்ப வர், வேட்பாளருக்கான டெபாசிட் தொகை ரூ.25 ஆயி ரத்துக்கு 10 ரூபாய் நாணயங்களாக கொண்டுவந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செலுத்தி, தேர்த லில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நி லையில், பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் டெபாசிட் தொகை ரூ.25 ஆயிரத்தை 5 ரூபாய் நாணயங்களாகக் கொண்டு வந்து ஆட்சியர் அலு வலகத்தில் செலுத்தி, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து, கவனத்தை ஈர்த்துள்ளார்.
பல்லடம்
பட்டு சேலைகள் பறிமுதல்
பல்லடம் அருகே ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பட்டு சேலை களை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்த னர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கேத்தனுரில் அவ்வழியாக வந்த வாகனங்களை பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் தலைமையில், தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தணிக்கை செய்து கொண்டிருந்த னர். அப்போது மடத்துக்குளத்தில் இருந்து அவிநாசி சாவக் காட்டுபாளையம் நோக்கிச்சென்ற வேனை நிறுத்தி சோத னையிட்டனர்.
அதில் தங்கராஜ் (43), அமுதா (37) ஆகியோர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.4 லட்சத்து 29 ஆயிரத்து 300 மதிப்புள்ள 81 பட்டு சேலைகளை கொண்டு வந்தது கண்ட றியப்பட்டது. இதைத்தொடர்ந்து அதனை பறிமுதல் செய்தனர்.