districts

img

விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்

தருமபுரி, பிப்.6- நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு  மனைப் பட்டா வழங்க வேண்டும் என அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க அரூர்  ஒன்றிய பேரவைக் கூட்டம் ஒன்றிய தலைவர் எம்.தங்க ராஜ் தலைமையில் அரூரில்  நடைபெற்றது. இதில், மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாவட்ட செயலா ளர் எம்.முத்து, மாவட்ட தலைவர் எம்.ரவி, மாவட்ட பொரு ளாளர் இ.கே.முருகன், ஒன்றிய செயலாளர் குமரேசன், பொருளாளர் சடையாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில், நிலமற்ற விவசாயத் தொழிலாளர் களுக்கு அரசு சார்பில் நிலம் மற்றும் வீட்டு மனைப்பட்டா  வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை பேரூராட்சி, நகராட்சி பகுதி களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். 60 வயது நிறை வடைந்த விவசாய தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் பழுதாகியுள்ள தொகுப்பு வீடுகளை அரசு சார்பில் சீரமைப்பு செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து, சங்கத்தின் புதிய அரூர் ஒன்றிய தலைவராக எம்.தங்கராஜ், ஒன்றிய செயலாளராக கே.குமரேசன், பொருளாளராக சடையாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.