ஈரோடு, டிச. 20- வழிபாட்டு உரிமையைப் பாது காக்க சிறுபான்மை மக்கள் நலக் குழு வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 ஆம் தேதி சிறுபான்மையினர் உரிமை கள் தினம் கொண்டாடப்படுகிறது. அவர்களது உரிமைகளைப் பாது காக்கவும், நலத்திட்டங்கள் சென்ற டையவும், நாடு முழுவதும் இந்த தினம் அரசால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சி யர் ராஜகோபால் சுன்கரா தலைமை யில் சிறுபான்மையினர் உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்று, சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து பேசுகையில், பெருந்துறை அருகே பெத்தாம்பாளையம் பேரூராட்சிக் குட்பட்ட பொன்னாண்டவலசு பகுதி யில் தலித் கிறித்தவர்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் தேவாலயம் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த இடத்திற்குப் பட்டா இல்லை. இதனால், அந்த தேவாலயத்தில் வழிபடுவது பிரச்சனையாக்கப்படு கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அம்மக்களின் வழிபாட்டு உரிமையைப் பாதுகாக்க வேண்டும். மேலும், அந்தியூர் வட்டம், பர்கூர் பகுதியில் இஸ்லாமியர்கள் கணிச மானோர் வசித்து வருகின்றனர். அம் மக்களுக்கு இறந்தவர்களை அடக் கம் செய்ய கபர்ஸ்தான் இல்லை. எனவே, அவர்கள் வசிக்கும் பகுதியி லேயே கபர்ஸ்தான் அமைத்துக் கொடுக்க வேண்டும். அதேபோல், ஐஆர்டிடி கல்லூரி அமைந்துள்ள பகுதியில் கிறித்தவர் களுக்கு கல்லறை, இஸ்லாமியர்க ளுக்கு கபர்ஸ்தான் அமைக்க இடம் கொடுக்கப்படும் என உறுதியளிக்கப் பட்டது. ஆனால், இதுவரையிலும் அவற்றிற்கான இடம் வழங்கப்பட வில்லை. எனவே, ஏற்கனவே அறி வித்தபடி இடம் ஒதுக்க வேண்டும் என்றார்