districts

img

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திடுக

சேலம், ஜூன் 4-  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை மத்திய, மாநில அரசு நடைமுறைப்படுத்திட வேண்டும் என மத்திய, மாநில அரசு பொதுத் துறை ஓய்வூதியர் அமைப்புகளில் ஒருங்கிணைப்புக்குழு சேலம் மாவட்ட 2 ஆவது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் எம்.முருகேசன் நினைவு அரங்கத்தில் செயல் தலைவர் கே.ஆர்.கணேசன் தலைமையில் மாநாடு நடை பெற்றது. முன்னதாக தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் வரவேற்புரை யாற்றினார். மாவட்ட செயலாளர்  டி.சேசகிரி அறிக்கை முன்வைத் தார்.  அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதி யர் அமைப்பின் மாவட்ட செயலா ளர் சண்முகம், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரி யர் சங்கத்தின் மாவட்ட பொருளா ளர் ராஜகோபால், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ராஜ் குமார், தமிழ்நாடு அரசு போக்குவ ரத்து ஓய்வூதிய நல அமைப்பின் மண்டல செயலாளர் எஸ்.அன்பழ கன் உள்ளிட்டு அனைத்து ஓய்வூதி யர் சங்கங்களின் ஒருங்கிணைப் புக் குழுவைச் சார்ந்த நிர்வாகிகள் கருத்துரை வழங்கினர். இதில் போக்குவரத்து ஓய்வூதி யத்துக்கு 78 மாத பஞ்சப்படி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசு கள் பொதுத் துறைகளில் உள்ள  காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். அரசு போக்கு வரத்தை தனியார் மயப்படுத்தல் கூடாது. மின்வாரியம் பொது  துறையாக நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி செய லர், சத்துணவு அங்கன்வாடி, வரு வாய் கிராம உதவியாளர் மற்றும்  வனத்துறை அலுவலர் உள்ளிட்ட  அனைவருக்கும் குறைந்தபட்ச பென்சன் ஆக 7850 வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது. மத்திய, மாநில அரசு பொதுத் துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு பொதுச் செயலாளர் கே.ராகவேந்திரன் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் தலைவராக ஏ.நட ராஜன், மாவட்ட செயலாளராக டி. நேதாஜி சுபாஷ், பொருளாளராக பி.சுதாகரன் மற்றும் 5 துணை தலைவர்கள், 5 துணை செயலா ளர்கள் என 15 பேர் கொண்ட  புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். முடிவில் அகில இந்திய பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் நிர்வாகி சுதாகரன் நன்றி கூறி னார்.