ஈரோடு, மார்ச் 18- முறைசார தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை அறிவிக்க வேண் டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங் கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தின் ஈரோடு மாவட்ட அமைப்பு கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவல கத்தில் வியாழனன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளர் மு.சீனிவா சன், மாவட்ட செயலாளர் ச.விஜயமனோ கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், அரசுத்துறைகளில் ஒப்பந் தம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறை களை கைவிட வேண்டும். சிறப்பு கால முறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரை யறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியா ருக்கு விற்கும் தேசிய பணமாக்கல் திட் டத்தை கைவிட வேண்டும். முறைசார தொழி லாளர்கள் அனைவருக்கும் சமூகப் பாது காப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் மாவட்ட தலைவராக ஏ.ராஜன், செய லாளராக எம்.கண்ணன், பொருளாளராக ராஜேஸ்வரி, துணைத் தலைவர்களாக பழ னிச்சாமி, பழனியம்மாள், செல்வி, துணைச் செயலாளராக நிர்மலா, பாப்பாத்தி, செல்வி, மாநில செயற்குழு உறுப்பினராக கவிதா, தணிக்கையாளர்களாக முருகன், என்.பழனிச்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.