திருப்பூர், மார்ச் 29- ஊத்துக்குளி பேரூராட்சி யில் புதிய கொடிவேரி குடிநீர் திட்டத்தை வேகமாக நிறை வேற்றி வீட்டுக் குடிநீர் இணைப் புகளை வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சி மன்ற உறுப்பினர் கே. சரஸ்வதி வலியுறுத்தியுள்ளார். ஊத்துக்குளி பேரூராட்சி மன்ற கூட்டம் செவ்வாயன்று பேரூராட்சி தலைவர் இரா.பழனியம்மாள் ராசுகுட்டி தலைமையில் நடைபெற்றது. ெயல் அலுவலர் சு.இந்துமதி அலுவல்களை முன்மொழிந்தார். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 7 ஆவது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் கே.சரஸ் வதி கலந்து கொண்டு மக்கள் பிரச்சனைகள் குறித்து கூறியதாவது, புதிய கொடிவேரி குடிநீர் திட்டத்தை வேகப்படுத்தி, நிறைவேற்றி புதிய வீட்டுக்குடிநீர் இணைப்புகளை வழங்க வேண்டும். காலிமனையிட வரி, வரைபட அங்கீகாரம், சொத்து வரி விதிப்பு கட்டணங் கள் அதிகமாக உள்ளதை குறைக்க வேண் டும். சுகாதார பணியாளர்களுக்கு தீபாவ ளிக்கு வழங்க வேண்டிய சீருடை வழங்கா ததை உடனே வழங்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள், பொது சுகாதார பொருட்கள் வழங்குதல், அனைத்து வீதிகளுக்கும் கொசு மருந்து தெளித்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்துதல் உள்ளிட்ட பொது கோரிக்கைகளை வலியு றுத்தினார். அத்துடன் 7ஆவது வார்டில் நீர்நிலையான வாரிகுட்டையில் கொட்டப்பட்டு வரும் குப் பையை அகற்றி தூர்வார வேண்டும். கொளத்தோட்டம் பகுதியில் விடுபட்ட மண் சாலையை தார்ச்சாலையாக்குதல், கிணத்தாங் காடு பழுதான தார்ச்சாலையை புதுப்பித்து தருதல், தெற்கு வீதி, பத்திரப்பதிவு அலுவலக வீதி காங்கிரீட் சாலை அமைத்தல், பழுதான மேல்நிலைப் குடிநீர் தொட்டிக்கு பதில் புதிய தாக அமைத்தல், பாரதி நகர் கிணற்றுக்கு பாது காப்பு மூடி அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கை களையும் நிறைவேற்றித் தர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத் தில் துணை தலைவர் வி.ஏ.சரவணன் உட்பட மற்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.