தருமபுரி, டிச.26- இலக்கியம்பட்டி ஊராட்சியிலுள்ள பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட இலக்கியம்பட்டி ஊராட்சி யில் துவக்கப்பள்ளி தெரு உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற் கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நடுத்தர மற்றும் ஏழை கூலி தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இங்கு ஒகேனக்கல் குடிநீர் வாரத்திற்கு இரண்டு நாள் விநியோ கம் செய்யப்படுகிறது. இந்த குடிநீரில் உப்பு கலந்த ஆழ்துளை கிணறு தண்ணீரை கலந்துவிடுவதால்,குடிப்பதற்கு உபயோக மில்லாமல் இருந்தது. இதனால் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட் சித்துறை சார்பில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்கப்பட்டது. இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீரா னது ஒரு குடம் ரூ.5 என வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள அனைவரும் சுத்திகரிக்கப் பட்ட குடிநீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த ஒருவார காலமாக பழுத டைந்துள்ளது. இதனால் மக்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்படு கின்றனர். மேலும், இந்த தெருவில் தெருவிளக்கு எரிவ தில்லை. இரவு நேரங்களில் குண்டும், குழியுமான சிமெண்ட் சாலையின் வழியாக செல்லும் மக்கள் கால் தவறி கீழே விழும் நிலை உள்ளது. தெருக்களின் ஓரம் கொட்டப்படும் குப்பைகளை மாதக்கணக்கில் சுத்தம் செய்யப்படுவதில்லை. துர்நாற்றத்தை கடந்து முகம் சுழித்து கடந்து செல்ல வேண் டிய நிலையுள்ளது. இப்பிரச்சனைகள் குறித்து ஊராட்சி நிர்வா கத்திடம் அப்பகுதி மக்கள் முறையிட்டும் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வா கம் தலையிட்டு இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.