districts

img

பொதுக்கழிப்பிடங்களை முறையாக பராமரிக்க வலியுறுத்தி

சேலம், மார்ச் 10- சேலம் மாநகராட்சி பொதுக்கழிப்பிடங் களை முறையாக பராமரிக்க வேண்டும் என  வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  வாலிபர் மற்றும் மாதர் சங்கம் சார்பில் காத்தி ருப்புப் போராட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் வெளியூரிலிருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல் கிற மிக முக்கிய பகுதியாக உள்ள சேலம் மாவட்டம், சாமிநாதபுரத்தில் முனியப்பன் கோவில் தெரு, அந்தோனிசாமி தெரு, கிருஷ் டியன்பேட்டை ஆகிய மூன்று இடங்களில்  உள்ள இலவச பொதுக்கழிப்பிடங்களையும் முறையாக பராமரித்து, மக்கள் பயன்பாட் டிற்கு ஏதுவாக வழிகாட்டி பலகை வைத்திட வேண்டும். பள்ளப்பட்டியில் உள்ள இலவச பொதுக்கழிப்பிடத்தில் மக்களிடம் கட்டண  வசூல் செய்வதோடு, முறையாக பராமரிப்ப தில்லை. இதனை உடனடியாக பராமரிக்க வேண்டும். சின்னேரிவயல்காடு பகுதியில்,  கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் பிரதான  கோரிக்கையாக உள்ள பொதுக்கழிப்பி டத்தை அமைத்து தர வேண்டும். சேலம் புதிய  பேருந்து நிலையத்தில் உள்ள 5 கழிப்பிடங் களிலும் கட்டண வசூல் என்ற பெயரில் பகல் கொள்ளை நடைபெறுகிறது. இதனை உடன டியாக தடுத்து நிறுத்தி, கழிப்பிடத்தை பரா மரிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் காத்திருப்புப் போராட் டம் நடைபெற்றது. சாமிநாதபுரம் பகுதியிலுள்ள பொதுக் கழிப்பிடம் முன்பு நடைபெற்ற இந்த போராட் டத்திற்கு சிபிஎம் வடக்கு மாநகரச் செயலா ளர் என்.பிரவீன்குமார் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை. சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.வெங்கடபதி, சிபிஎம் வடக்கு மாந கரக்குழு உறுப்பினர்கள், வாலிபர் சங்க மாந கரச் செயலாளர் ஆர்.குருபிரசன்னா, தலை வர் ராமச்சந்திரன், மாதர் சங்க மாநகரச் செய லாளர் ரம்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.