districts

ஆஞ்சியோ கருவியை சரி செய்ய வலியுறுத்தல்

சேலம், செப்.17- சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படாமல் உள்ள ஆஞ்சியோ கரு வியை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி யில் மூன்று மாத காலமாக ஆஞ்சியோ கருவி செயல்படாமல் உள்ளது. இதனால் இங்கு பரிசோதனைக்காக வரும் நோயா ளிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே உடனடி யாக செயல்படாமல் உள்ள ஆஞ்சியோ கருவியை சரி செய்ய  வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.ஜெகநாதன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில், சங் கத்தின் மாவட்டச் செயலாளர் பெரியசாமி, நிர்வாகி திவ்யா  ஆகியோர் கலந்து கொண்டனர்.