districts

img

பனியன் தொழிலாளர்களுக்கு கூடுதல் போனஸ் வழங்க வலியுறுத்தல்

திருப்பூர், அக்.14 – தற்போதுள்ள விலைவாசி உயர் வுக்கு ஏற்ப பனியன் தொழிலாளர்க ளுக்கு கூடுதல் போனஸ் வழங்க வேண் டும் என்று அனைத்து பனியன்  தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள் ளன. திருப்பூர் சிஐடியு பனியன் தொழிற் சங்க அலுவலகத்தில் சிஐடியு பனி யன் சங்க பொதுச்செயலாளர் ஜி.சம் பத் தலைமையில் அனைத்து தொழிற் சங்க நிர்வாகிகள் கூட்டம் சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருப் பூர் பனியன் தொழிலாளர்களின் போனஸ் கோரிக்கை குறித்து கலந்து ஆலோசனை செய்யப்பட்டது. அத னடிப்படையில் தற்போது கடுமை யாக உயர்ந்து இருக்கும் விலைவா சிக்கு ஏற்ப, அனைத்து பனியன் தொழிலாளர்களுக்கும் கடந்தாண்டை காட்டிலும் கூடுதல் போனசை, அந் தந்த நிறுவன உரிமையாளர்கள் தீபா வளி பண்டிகைக்கு 15 நாட்களுக்கு முன்பாக வழங்க வேண்டும். மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்.17 முதல் 26 ஆம் தேதி வரை திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார் பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட் டது. இக்கூட்டத்தில் ஏஐடியுசி பனி யன் சங்க பொதுச்செயலாளர் என்.சேகர், எல்பிஎப் பனியன் சங்கத் தலை வர் ஜி.பாலசுப்பிரமணியன், ஐஎன்டி யுசி செயலாளர் அ.சிவசாமி, எம்எல்எப் பனியன் சங்க செயலாளர் மனோ கரன், எச்எம்எஸ் செயலாளர் ஆர்.முத்துசாமி, சிஐடியு பொருளாளர் கே.நாகராஜ், எல்பிஎப் பொருளாளர் பூபதி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.