திருப்பூர், மார்ச் 15 – திருப்பூர் மாநகரின் மையப்பகு தியில் உள்ள தென்னம்பாளையத் தில் எழுத்துக்களுடன் கூடிய சுமை தாங்கிக் கல்லை தொல்லியல் வர லாற்று ஆய்வு மையத்தினர் கண்டுபி டித்துள்ளனர். தமிழ்ச்சமுதாயத்தில் சக மனிதர் கள் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக அன்னச் சத்தி ரங்களும், தாகம் தணிக்கும் வகை யில் நீர் மோர் பந்தல்களும், இரவில் தங்குவதற்கு மடங்களும் கட்டி வைத்தனர். மக்களுடன் பயணிக்கும் கால்நடைகளுக்கும் தாகம் தணிக் கும் வகையில் சாலைகளில் உள்ள கிணறுகளுக்கு அருகில் கல் தொட்டி களும் கட்டி வைக்கப்பட்டிருந்தன. பண்டைய காலத்தில் அனைத்து விளைப்பொருட்களும் ஒரே இடத் தில் கிடைக்கச் சந்தைகள் ஏற்படுத் தப்பட்டுப் பொருட்கள் மாட்டு வண் டிகளிலும், தலை சுமைகளிலும் எடுத்துச் செல்வது பண்டைய நடைமு றையாக இருந்தது. தலைச்சுமையோடு சில மைல் கள் பயணிப்பது சிரமமான காரியம் என்பதால் சந்தை நடைபெறும் கிரா மச் சாலைகளில் கிணறுகள் அருகில் சுமைதாங்கி கற்கள் பிறரால் ஏற்படுத் தப்பட்டு இதன் அருகே நீர் அருந்த தொட்டியும், இளைப்பாரிச் செல்ல மரங்களும் நடப்பட்டது ஓர் உன்னத மான அருட்செயல் ஆகும். இதன் மூலம் சுமையோடு வருபவர்கள் நின்ற நிலையில் சுமையை அங் குள்ள சுமைதாங்கிக் கல்லில் இறக்கி வைத்து எடுத்துச் செல்ல எளிதாக இருந்தது. குறிப்பாக இந்த சுமைதாங்கி கற்கள் இறந்த கர்ப்பிணிப் பெண் கள் நினைவாக தமிழகமெங்கும் நடப் பட்டுள்ளன. இந்நிலையில் திருப்பூ ரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறி யாளர் சு.ரவிக்குமார், க.பொன்னுச் சாமி ஆகியோர் தென்னம்பாளை யத்தில் எழுத்துக்களுடன் கூடிய சுமைதாங்கி கல் ஒன்றை கண்டறிந் துள்ளனர். இதைப்பற்றி ஆய்வு மைய இயக் குனர் பொறியாளர் சு.ரவிக்குமார் கூறியதாவது: திருப்பூரில் செவ்வா யன்று நடைபெறும் வாரச்சந்தையும், வைகாசி மாதத்தில் நடைபெறும் தேர் சந்தையும் கொங்கு மண்ட லத்தில் புகழ்பெற்றவை ஆகும். இங்கு பொருட்களை வாங்கி செல் வோர் பயன்படுத்தும் வகையில் சந் தைக்குக் கிழக்கே தென்னம்பாளை யம் கோயில் மைதானப் பகுதியில் அமைந்துள்ள கிணற்றுமேட்டில் 127 ஆண்டுகளுக்கு முற்பட்ட 13 வரிகள் கொண்ட தமிழ் எழுத்துக்களுடன் கூடிய ஒரு சுமைதாங்கி கல்லை சாலை விரிவாக்கத்தின் போது கலைந்து விட்ட நிலையில் கண்ட றிந்துள்ளோம். 90 செ.மீ உயரமும், 50 செ.மீ அகலமும் கொண்ட கல்லில் ஆங்கில ஆண்டு 1897இல் ஹேவிளம் பித் தமிழ் ஆண்டில் பங்குனி மாதம் 19 ஆம் தேதி ரங்கபோயன் மகன் கருப் பபோயனால் போடப்பட்ட சுமை தாங்கி என்ற செய்தி காணப்படுகி றது. யார் நினைவாக அமைத்தார்கள் என்ற தகவல் கிடைக்கவில்லை. எனி னும் சுமை தாங்கிக் கல்லின் மூலம் மனித நேயத்துடன் பிறர்க்கு உதவும் தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பை அறிந்து கொள்ள முடிகிறது.