உதகை, மார்ச் 20- நீலகிரி மாவட்டத்தில் பழுதடைந்த மற்றும் பயன்பாடின்றி கிடந்த 68 வாட்டர் ஏடிஎம்களை சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல்வேறு பிளாஸ்டிக் பொருட்க ளுக்கும் தடை விதிக்கப்பட்டு வந்தது. 2 ஆண்டுகளுக்கு முன் நீலகிரி மாவட் டத்தில் ஒரு லிட்டர், அரை லிட்டர் மற் றும் 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட அனைத்து வகையான வாட்டர் பாட் டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில் கள் விற்பனை செய்யவும், பயன்படுத் தவும் தடை விதிக்கப்பட்டது. இத னால், வெளியூர்களிலிருந்து உதகை வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான குடி நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் தண்ணீர் (வாட்டர்) ஏடிஎம்களை மாவட்ட நிர்வாகம் நிறு வியது. அந்தத்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புக்களை கொண்டு இந்த வாட்டர் ஏடிஎம்கள் அமைக்கப் பட்டது. ரூ.5 செலுத்தினால் ஒரு லிட் டர் தண்ணீர் கிடைக்கும் வகையில் இந்த வாட்டர் ஏடிஎம்கள் அமைக்கப் பட்டன.
சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் சுற்றுலா தலங்கள் மற்றும் பொது இடங்களில் இந்த வாட்டர் ஏடி எம்கள் அமைக்கப்பட்டன. துவக்கத் தில் இதனை சுற்றுலா பயணிகள் மற் றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த னர். ஆனால், நாளடைவில் பெரும்பா லான வாட்டர் ஏடிஎம்கள் செயல்படா மல் போனது. பல ஏடிஎம்கள் பழுத டைந்த நிலையில், இதனை சுற்றுலா பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், சுகாதார மான தண்ணீர் கிடைக்கிறதா? என்ற சந்தேகமும் எழுந்தது. இந்நிலையில், இந்த வாட்டர் ஏடி எம்களை சீரமைக்க மாவட்ட நிர்வா கம் உத்தரவிட்டது. மேலும், அனைத்து வாட்டர் ஏடிஎம்களையும் முறையாக பராமரிக்க அந்தந்த பகுதிகளில் உள் ளாட்சி அமைப்புகளில் உள்ள பணி யாளர் ஒருவரையும் நியமித்துள்ளது. இந்த, 68 வாட்டர் ஏடிஎம்களையும் பழுது பார்க்கும் பணிகள் மற்றும் சீர மைக்கும் பணிகள் சனியன்று துவங் கப்பட்டது. இதைத்தொடர்ந்து, உதகை தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் மற்றும் பூங்காவிற்குள் உள்ள வாட்டர் ஏடிஎம்களை சீரமைத்து சுத் தமான குடிநீர் வருவதற்கு நடவ டிக்கை மேற்கொண்டனர். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள வாட்டர் ஏடிஎம்கள் சீரமைக்கப்படும் என அதி காரிகள் தெரிவித்துள்ளதால் அப்ப குதி பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ள னர்.