கோவை, ஜன.10– கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்களப் பணி யாளர்களுக்கு மூன்றாவது தவணை (பூஸ்டர்) தடுப்பூசி போடும் பணியை திங்களன்று மாவட்ட ஆட்சியர்கள் துவக்கி வைத்தனர். கோவை அரசு மருத்துவம னையில் முன்களப் பணியாளர் கள் உள்ளிட்டவர்களுக்கு மூன்றா வது தவணை (பூஸ்டர்) தடுப்பூசி போடும் பணியை திங்களன்று மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் துவக்கி வைத்தார். இதனைத்தொ டர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மாவட்டத் தில் 2022 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி மக்கள் தொகை 38 லட்சத்து 67 ஆயிரமாக உள்ளது. இதில், தடுப்பூசி போடு வதற்கு தகுதியானவர்கள் 27 லட் சத்து 90 ஆயிரம் ஆவார்கள். இவர் களில் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் 27 லட்சத்து 51. இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டவர்கள் 22 லட்சத்து 84 ஆயிரம் பேர். தடுப்பூசி செலுத்தி யதில் கோவை மாவட்டம் மாநில அளவில் முன்னோடி மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. தற்போது 15 வயது முதல் 18 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு தடுப் பூசி செலுத்தும் பணி நடந்து வரு கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக தடுப்பூசியை செலுத்தி முடிக்க உள்ளோம். மூன்றாவது தவணை தடுப்பூசி யான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தமிழக அரசின் வழி காட்டுதலின்படி தொடங்கி வைக் கப்பட்டு, சுகாதாரப் பணியாளர் கள், முன்களப் பணியாளர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி செலுத்தப்பட உள் ளது. சுகாதாரப் பணியாளர்கள் உள் ளிட்ட 70 ஆயிரம் பேர் பூஸ்டர் தடுப் பூசி செலுத்த தகுதியானவர்கள். இவர்கள் அனைவருக்கும் ஜன.31 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத் தும் பணி மேற்கொள்ளப்பட இருக் கிறது. தற்போது 3 ஆவது அலை யாக கொரோனா தொற்று வேக மாக பரவி வருகிறது. மாவட்டத் தில் 9 ஆயிரத்து 800 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள் ளது. மேலும், கொரோனா கேர் சென்டரில் 4 ஆயிரத்து 300 படுக் கைகளும், 5 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. வெளியே செல்லும் பொதுமக் கள் கண்டிப்பாக இரண்டு முகக் கவசங்களை அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின் பற்ற வேண்டும். மேலும், தகுதி உள்ள அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், என்றார். சேலம் சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பூஸ்டர் டோஸ் போடும் பணி யினை மாவட்ட ஆட்சியர் செ.கார் மேகம் திங்களன்று துவக்கி வைத் தார். சேலம் மாவட்டத்தில், பூஸ்டர் டோஸ் போடுவதற்கு 15 ஆயிரத்து 25 சுகாதாரப் பணியாளர்களும், 18 ஆயிரத்து 192 முன்களப் பணியாளர்களும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ள 24 ஆயிரத்து 807 என மொத்தம் 58 ஆயிரத்து 24 பேர் தகுதியுள்ள நபர்களாக உள்ளனர். இவர்க ளுக்கு முன்னுரிமை அளித்து, முகாம்கள் அமைத்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செ.கார் மேகம் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்நிகழ்வில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரா.ராஜேந்திரன், மோகன் குமாரமங்கலம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.