தருமபுரி, டிச.25- காட்டேரி ஊராட்சி சிவசக்தி நகருக்கு குடிநீர் அமைக்கும் பணியை மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் கோவிந்த சாமி துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டேரி ஊராட்சியில் அனுமன் தீர்த்தம் அருகில் உள்ள ஆண்டிச்சேரி சிவசக்தி நகர் மக்க ளின், நீண்ட நாள் கோரிக்கையான குடி தண் ணீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில், ஒன்றிய பொது நிதியில் இருந்து ஆண்டிச் சேரி திறந்தவெளி கினற்றில் இருந்து, மோட் டார் மற்றும் பைப் லைன் அமைக்கும் பணி துவக்கப்பட்டது. இந்த பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டேரி ஒன்றிய கவுன்சிலர் வி. கோவிந்தசாமி துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் வட்ட செயலாளர் பி.வரத ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவ சக்தி நகர் ஆனந்தன், சேகர் உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.