தருமபுரி, டிச.29- ஒப்பந்த தூய்மைப் பணியாளர் களுக்கு, ஊதிய உயர்வு அளித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது என தேசிய தூய்மைப் பணியாளர் நலவாரிய ஆணையர் எம்.வெங்கடேசன் தெரிவித்துள் ளார். தருமபுரி நகரம், குமாரசாமி பேட்டை நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு பகுதி, நகராட்சி பேருந்து நிலையம், நகராட்சி அலு வலகத்தில் தூய்மைப் பணியாளர்க ளுக்கான மருத்துவ முகாம் ஆகிய வற்றை தேசிய தூய்மைப் பணியா ளர் நல வாரிய ஆணையர் எம்.வெங் கடேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தருமபுரி நகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் வசிக்கும் தூய்மை பணியாளர்களின் குடியிருப்புக ளில் வசித்து வரும் குடியிருப்பாளர் களிடம் குடிநீர், கழிவுநீர் வாய்க்கால் போன்ற அடிப்படை வசதிகள் உள் ளதா? என்பது குறித்தும், மின்சார வசதி, குடியிருப்புகளின் தற்போ தைய நிலை உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் தேசிய தூய்மைப் பணியாளர் நல வாரிய ஆணையர் எம்.வெங்கடேசன் விரிவாக கேட்ட றிந்தார். அதனைத்தொடர்ந்து நக ராட்சி பேருந்து நிலையத்தில் பணி யாற்றி வரும் தூய்மைப் பணியாளர் களிடம் அவர்களுக்கு வழங்கப்ப டும் ஊதியம், வேலை நேரம், ஊதி யத்தில் பிடித்தம் செய்யப்படுகி றதா, இஎஸ்ஐ மருத்துவமனை அட்டை உள்ளதா என பல்வேறு விவரங்களை தேசிய தூய்மைப் பணியாளர் நல வாரிய ஆணையர் எம்.வெங்கடேசன் கேட்டறிந்தார். இதன்பின், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட ரங்கில் தூய்மைப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் சங்க பிரதிநிதிக ளுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி முன்னி லையில் நடைபெற்து. இதில், தேசிய தூய்மைப் பணியாளர் நலவாரிய ஆணையர் எம்.வெங்கடேசன் பேசு கையில், மருத்துவமனை தூய் மைப் பணியாளர்கள் உள்ளிட்டோ ரின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழக அரசுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒப் பந்த முறையில் தூய்மைப் பணி யாளர்களை பணியில் ஈடுபடுத்தும் தனியார் நிறுவனங்கள் அவர்களுக் கான பாதுகாப்பு கவசங்கள், கையு றைகள், மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டும். இதில், விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக் கப்படும், என எச்சரிக்கை விடுத் தார்.