districts

img

பிஏபி திட்டத்தில் காண்டூர் கால்வாய் புதுப்பிக்கும் பணி நிறைவு

உடுமலை, செப். 2- உடுமலை திருமூர்த்தி காண்டூர் கால் வாய் புதுப்பிக்கும் பணி நிறைவு பெற்றதை  தொடர்ந்து இக்கால்வாய் வழியாக தொகுப்பு  அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.  பிஏபி., பாசன திட்டத்தில் உடுமலை திரு மூர்த்தி அணை மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 77 ஆயி ரம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்டலமாக பிரிக் கப்பட்டு பாசன வசதி பெறுகின்றன. மேலும்,  உடுமலை நகராட்சி, மடத்துக்குளம், குடி மங்கலம் ஒன்றியப் பகுதிகளில் உள்ள கிரா மங்களுக்கு குடிநீர் திட்டங்களும் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன. மேற்குதொடர்ச்சி மலையில் அமைந் துள்ள பிஏபி திட்டத்தொகுப்பு அணைகளில் இருந்து, 48.39 கி.மீ., தூரம் அடர்ந்த வனப்பகு திகளில் மலையை குடைந்து அமைக்கப்பட் டுள்ள காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர்  திருமூர்த்தி அணைக்கு கொண்டு வரப்பட்டு சேமிக்கப்படுகிறது. இங்கிருந்து பிரதான கால்வாய் மூலம் பாசன நிலங்களுக்கு தண் ணீர் வழங்கப்பட்டு வருகிறது.  இத்திட்ட தொகுப்பு அணையிலிருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வரும் காண் டூர் கால்வாய் கடந்த 1960ஆம் ஆண்டு அமைக் கப்பட்டது. கால்வாய் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளதால்,  மலைச்சரிவு,  பாறைகள் உடைந்து விழுவது,   மரங்களின் வேர்  உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, நீர் இழப்பும் ஏற் பட்டு வந்தது.  இதனையடுத்து, கடந்த 10 ஆண்டுக ளுக்கு முன் ரூ.184 கோடி மதிப்பில் காண்டூர்  கால்வாய் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. இதில் 30.10 கி.மீ., முதல் 49.39 கி.மீ., வரையி லான பணிகள் நடைபெற்றன.

5.26 கி.மீ.,  தொலைவுக்கு கால்வாய் பணி நிலுவையில் இருந்தது. இதனை முழுவதுமாக, கான்கிரீட்  கால்வாயாக மாற்ற வேண்டும் என விவசாயி கள்  வலியுறுத்தி வந்தனர்.  இதனையடுத்து, ரூ.72 கோடி நிதி ஒதுக்கப் பட்டது. ஏப்ரல் 24ஆம் தேதி மூன்றாம் மண்டல  பாசனம் நிறைவு பெற்றதையடுத்து, குடிநீர்  தேவைக்காக அணையில் நீர் சேமிக்கப்பட்டு  கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் காண்டூர் கால் வாய் புதுப்பிக்கும் பணி துவங்கியது. நடப் பாண்டு 2.6 கி.மீ., மூன்று பகுதிகளாகப் பிரிக் கப்பட்டு பணிகள் நடந்தன. ஏற்கனவே, 4.9  மீட்டர் அகலம் உள்ள கால்வாய் 5.9 முதல்   6.2 மீட்டர் வரை அகலப்படுத்தப்பட்டு, 4.35  மீட்டர் உயரத்திற்கு முழுவதும் கம்பிகள் கட்டி  நல்லாறு, திருமூர்த்தி அணைப்பகுதிகளில் கான்கிரீட் கால்வாயாக மாற்றப்பட்டும் ‌வேலைகள் கடந்த வாரம் முடிவடைந்தது. இதையடுத்து இந்த கால்வாய் வழியாக  தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி  அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்து சேர்ந்தது. இதுகுறித்து பொதுப்பணித்துறை நிர்வாகிகள் கூறியதாவது, காண்டூர் கால் வாய் புதுப்பிக்கும் பணி நிறைவு பெற்றதைய டுத்து, திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து சேமிக்கப்படும்.செப்டம்பர் இரண் டாம் வாரம், 4ஆம் மண்டல பாசனத்திற்கு தண் ணீர் திறக்கும் வகையில், பிரதான கால்வாய்,  கிளைக் கால்வாயிகளில் தூய்மைப் பணிகள்  நடந்து வருவதாய்கக் கூறினர்.