கோவை, செப்.16- கோவையில் தொழில் வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. மின்னணு உற்பத்தியி லும் தற்போது கோவை தடம் பதித்துள்ளதென, தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள் ளார். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கண்ணம் பாளையம் பகுதியில் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் எஸ் நிறுவனத்தின் புதிய கிளையின் துவக்க விழா திங்களன்று நடைபெற்றது. இதில், தமிழக தொழில், முதலீடு மற்றும் வணிகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, இந்திய அர சின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், கோவை மாவட்ட ஆடசியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சியில், எஸ் நிறுவனத்தின் இந்தியா மற்றும் கோவை யில் உள்ள தொழிற்சாலையின் செயல் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மேலும், இந்த தொழிற்சாலை யின் மூலம் கோவை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திறன் வளர்ச்சிக்கு நான் முதல்வன் திட்டம் தமிழக அரசால் செயல் படுத்தப்பட்டு வருகிறது. தொழில் அனுமதி ஒற்றை சாளர முறையில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு எல்லா வகையிலும் உதவத் தயார். மின் வாகனங்கள், ஜவுளி ஆகிய தொழில்களுக்கு தமிழகம் முன்னணி மையமாக உள்ளது. 33 சதவிகிகிதம் நாட்டின் மின்னணு ஏற்றுமதியாக உள்ளது. தமிழ்நாடு ‘செமி கண்டக்டர்’ தயாரிப்பு மையமாக மாறும்.
பன் சிங்கிள் எலிமெண்ட்
ஏற்கனவே கோவையில் இத்தொழில் நிறுவனம் செயல் படுவதை முதல்வரிடம் அமெரிக்காவில் இந்நிறுவனம் சார்ந்த வர்கள் தெரிவித்த நிலையில், அடுத்த 5 - 10 ஆண்டுகளில் மீண்டும் முதலீடு செய்ய வேண்டும் என முதல்வர் கூறியதை அடுத்து, உடனடியாக ரூ.150 கோடி முதலீட்டில் மீண்டும் தொழில் துவங்கப்பட்டுள்ளது. எங்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் போல் திறன் வாய்ந்த அதிகாரிகள் உள்ளனர். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது ரூ.6 லட்சம் கோடி முதலீடு பெற்ற போது கூட ஏன் ரூ.10 லட்சம் கோடி இல்லை என எதிர்க்கட்சியினர் சொன்னார்கள். உலகளவில் கோவையை தொழில் மையமாகமாற்ற உள்ளோம். ‘பன் சிங்கிள் எலிமெண்ட்’ என்றால் ‘காம்பவுண்ட் எலிமெண்ட் கிரீம் பன்’ (Single element cream, compound element cream bun). நான் எதார்த்தமாக பேசி வருகிறேன். நீங்கள் ஏதாவது நினைத்தால் நான் பொறுப்பில்லை, என நகைச் சுவையாக பேசினார்.
அடுத்த கட்டத்தில் கோவை
தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச் சர் டி.ஆர்.பி ராஜா பேசுகையில், கோவையில் தொழில் வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து சென்று கொண் டிருக்கிறது. மின்னணு உற்பத்தியிலும் தற்போது கோவை தடம் பதித்துள்ளது. எஸ் நிறுவனம் கோவையில் தனது கிளையை துவக்கி உள்ளதன் மூலம் 300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. சிறு, குறு தொழில் முனை வோருக்கு ஒன்றிய அரசு அதிக அளவில் உதவி செய்ய வேண்டும். சிறு, குறு தொழில்களுக்கு ஒன்றிய அரசின் மூலம் ஏற்படும் சிக்கல்களை சரி செய்யும் இடத்தில் முதல்வர் உள்ளார். பாதாள சாக்கடை பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. அதேவேளை கடந்த நாடாளுமன்ற தேர்த லுக்கான தேர்தல் நடத்தை விதிகள் மூன்று மாதங்களுக்கு மேல் இருந்ததால் சாலைகளை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட் டுள்ளது. விரைவில் கோவையில் உள்ள அனைத்து சா லைகளும் தரமான முறையில் சீரமைக்கப்படும், என்றார்.