திருப்பூர் செப். 14 – தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கு மின் கட் டண உயர்வு, நிலைக்கட்டண உயர்வு ஆகியவற்றைக் கைவிட வலியுறுத்தி வரும் செப்டம்பர் 25ஆம் தேதி தமிழ கம் முழுவதும் உற்பத்தி நிறுத்தம் செய்வதென தமிழ்நாடு தொழில் துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தொழில் துறைக்கு நிலைக்கட் டணத்தை கடுமையாக உயர்த்தி இருப்பதுடன், உச்ச நேர (பீக் ஹவர்) பயன்பாட்டுக் கட்டணம் என்று கூடு தல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வை அறிவித்தவுட னேயே தொழில் துறையினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அமைச்சர் கள், உயரதிகாரிகள் இப்பிரச்சனை யில் உரிய தீர்வு காணப்படும் என்று தெரிவித்திருந்தனர். எனினும் கடந்த 11 மாதங்களாகக் காத்திருந்தும் தீர்வு கிடைக்காத நிலையில், இப்பிரச்ச னையில் நேரடியாக முதல்வரின் கவ னத்தை ஈர்க்கும் வகையில் தமிழ் நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள் வதென முடிவு செய்தனர். அதன்படி முதல் கட்டமாக பல்ல டம் அருகே காரணம்பேட்டை நால் ரோடு பகுதியில் கடந்த வாரம் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்தப்பட் டது. இதில் ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழில் துறையினர் கலந்து கொண்டனர். அதையடுத்து வியாழக்கிழமை பல்வேறு பகுதிகளில் இருந்து முதல் வருக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடத்தப்பட்டது. மின்னஞ்சல் மூல மும், பதிவுத் தபால் மூலமும் மின் கட் டண உயர்வு தொடர்பான ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி நூற் றுக்கணக்கான கடிதங்கள் அனுப்பப் பட்டன. இதன் தொடர்ச்சியாக வரும் 25 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் அமைப்பு கள் பங்கேற்கும் ஒரு நாள் அடை யாள உற்பத்தி நிறுத்தம் மேற்கொள் ளப்படுகிறது என்று தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு தெரி வித்துள்ளது. தொழில் துறை மின்நு கர்வோர் கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர்களில் ஒருவரும், திருப் பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற் பத்தியாளர் (டீமா) சங்கத்தின் தலை வருமான எம்.பி.முத்துரத்தினம் கூறு கையில், தமிழ்நாடு முழுவதும் அனைத்து சிறு, குறு தொழில் அமைப் புகளும் முதல்வரின் கவனத்தை ஈர்க் கும் வகையில் வரும் 25ஆம் தேதி ஒரு நாள் உற்பத்தி நிறுத்தத்தை மேற் கொள்கின்றனர்.
திருப்பூரைப் பொறுத்தவரை நிச்சயம் இந்த உற் பத்தி நிறுத்தம் முழுமையாக வெற்றி கரமாக நடைபெறும். அதற்குள் முதல்வர் தலையிட்டு நல்ல தீர்வு ஏற்படுத்தினால் இந்த உற்பத்தி நிறுத்தம் நடத்த வேண்டிய நிலை இருக்காது. தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில் துறையினரைப் பொறுத்தவரை மின் கட்டணப் பிரச்ச னையில் கடும் நெருக்கடியைச் சந் தித்து வருகின்றனர். ஏற்கெனவே மூலப்பொருள் விலை உயர்வு, சந்தை நெருக்கடி உள்ளிட்ட பல் வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில் மின் கட்டண உயர்வும் நெருக்கடியை அதிகரிக்கிறது. எனவே இப்பிரச்சனையில் தீர்வு ஏற் படும் வரை தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு பல்வேறு இயக்கங்களை முன்னெடுக்கும். செப்டம்பர் 25ஆம் தேதி அடையாள உற்பத்தி நிறுத்தத்திற்குப் பிறகும் தீர்வு காணப்படாவிட்டால் கூட்டமைப்பை சேர்ந்த அனைத்து அமைப்புகளும் கலந்து பேசி அடுத்தடுத்த தொடர் இயக்கங்களுக்கும் செல்வோம் என்று எம்.பி.முத்துரத்தினம் கூறி னார். இதுவரை 22 மாவட்டங்களைச் சேர்ந்த 170க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் அடையாள உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இன்னும் பல அமைப்புகளும் இதில் இணையும் என்று எதிர்பார்ப்பதாக கூட்டமைப்பி னர் தெரிவித்தனர்.