திருப்பூர், ஜூன் 19- இந்திய மாணவர் சங்க காங்கேயம் கிளை மாநாடு காங்கேயத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் காங்கேயம் கிளை மாநாடு ஞாயிறன்று காலை 11 மணிக்கு சௌபர்னிக்கா தலைமையில் காங்கேயத் தில் நடைபெற்றது. இம்மா நாட்டை, துவக்கிவைத்து மாணவர் சங்க மாவட்ட துணை தலைவர் கு.பாலமுரளி உரையாற்றினார். ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் ஜாண் கிருஸ்துராஜ், அ.பிரபு செபாஸ்டியன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில், தலைவராக சே. மோகனகுரு, செயலாளராக பிரமேஷ், துணை செயலாளர்களாக சஞ்சீவ், முகேஷ் பாலாஜி, துணைத் தலைவராக நல்லசாமி மற்றும் விக்ரம் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக, மாண வர் சங்க மாவட்ட துணை செயலாளர் கல்கி நிறைவுரை ஆற்றினார்.