districts

img

நிலத்தை விற்று தருவதாக கூறி பாஜக பிரமுகர் மோசடி

பொள்ளாச்சி, மார்ச் 27- பொள்ளாச்சி அருகே விவசாய நிலத்தை விற்றுத் தருவதாக கூறி பாஜக பிரமுகர் ஒருவர் ஏமாற்றியதால், பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சீலக்காம்பட்டி கிராமத் தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் அதே  பகுதியில் 18 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில மாதங் களுக்கு முன்பு அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை விற்பனை செய்வ தற்காக அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரும், பாஜக பிரமுகரான தம்பு என்கிற நந்தகோபால் என்பவருடன் விலை பேசியதாக கூறப்படுகிறது. இந் நிலையில், நிலத்தை விற்பனை செய்வ தற்கு அதில் வில்லங்கம் உள்ளதா?  என  பார்ப்பதற்கு வழக்கறிஞரிடம் அசல்  பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி, நந்த கோபால் நிலத்தின் பத்திரங்களை பெற்றுச்சென்றதாக கூறப் படுகிறது.

 ஆனால், நீண்ட நாட்களாகியும் இடத்தை விற்பனை செய்து தராமல், அவர் இழுத்தடித்து வந்ததால், மார்ச் 23 ஆம் தேதியன்று, விவசாயி கனகராஜ், அவரது மனைவி சுமதி, மகன் கிருத்திக் ஆகியோர் நந்தகோபால் வீட்டிற்கு சென் றுள்ளனர். அங்கு அவர் பத்திரத்தை திருப்பி தர மறுத்ததால், மனமுடைந்த கனகராஜ், மனைவி சுமதி ஆகியோர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து மயக்கம டைந்த இருவரையும் அவரது மகன் கிருத்திக் ஆம்புலன்ஸ் மூலம் கோலார் பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுமதி சிகிச்சை பல னின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், உயிருக்கு ஆபத் தான நிலையில் கனகராஜ், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டார். இதுதொடர்பாக, கிருத்திக் அளித்த புகாரின் அடிப்படையில், கோமங் கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

இந்நிலையில், மோசடியில் ஈடுபட்ட  பாஜக பிரமுகர் நந்தகோபால் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி, உயிரிழந்த சுமதியின் உடலை வாங்க மறுத்து வியா ழனன்று அவரது உறவினர்கள் பொள் ளாச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி உள்ளிட்ட காவல் துறையினர்  பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக  கூறினர். இதனால், உறவினர்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.