இதுதான் உண்மையான ஜனநாயகம் - கி.வீரமணி பேட்டி
கோவை, ஜன.11- இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. இது தான் உண்மையான ஜனநாயகம் என திராவிடர் கழக தலைவர் கி.வீர மணி கோவையில் செய்தியாளர் களிடம் தெரிவித்தார். கோவையில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவிலை நம்பி வாக்கு களை பெற தேர்தலை நடத்தலாம் என பிரதமர் நம்பிக்கொண்டி ருக்கிறார். அதை மக்கள் மத்தியில் தெளிவாக விளக்க இந்தியா கூட் டணி தயாராகிக் கொண்டிருக்கி றது. பிரதமர் கொடுத்த வாக்குறுதி களை அவர் நிறைவேற்றவில்லை என்பது மக்களுக்கு நன்றாக தெரிந் துவிட்டது. எனவே நாடாளுமன்ற பிரச்சனையில் பிரதமர் வாய் திறக் கவில்லை, குறிப்பாக தமிழகத்தில் நடந்த பேரிடரை கண்டுகொள்ள வில்லை, ஆனால் குஜராத் போன்ற மாநிலங்களுக்கு சிறிய பிரச்சனை என்றாலும் கூட ஆயிரம் கோடியை வழங்குகிறார். ஆகவே, எந்த வகையிலும் தங் களுக்கு ஆதரவு இல்லை என்ப தால், பக்தி மாத்திரையின் மூல மாக, தேர்தலை வென்று விடலாம் என இறுதியாக ராமரை நம்பி இருக் கிறார். அதனால் தான் அவசரக தியில் ராமர் கோவிலை கட்டி திறக்க இருக்கிறார். இதுவரை இந்தியா மட்டுமல்ல, எந்த நாட்டிலும் கோவி லுக்காக பிரதமர் அடிக்கல் நாட்டி, அதனை திறந்து யாரும் பார்த்தது இல்லை. இந்த அரசு மீண்டும் தேர்ந் தெடுக்கப்பட்டால் மனுதர்மம் தான் அரசியல் சட்டமாக்கப்படும். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என கேள்வி எழுப்பு கிறார்கள். அப்படி பிரதமர் வேட்பா ளரை அறிவிக்க வேண்டிய அவசி யம் இல்லை, இது தான் உண்மை யான ஜனநாயகம். சேலம் பெரியார் பல்கலைகழ கத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை குறித்து நிருபர்களின் கேள் விக்கு, ஆளுநர் எப்படி நடந்து கொள்கிறார் என மக்கள் புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. அரசியல் அமைப்புச் சட்டம் 162 படி ஆளுநர் மாநில அரசின் ஒரு பகுதி மட்டுமே. ஒருவர் மீது அரசு வழக்கு போட் டுள்ள போது, இவர் கிட்டயே செல்ல கூடாது. துணை வேந்தர் வழக்கு தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, குறிப்பாக குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டு, ஜாமினில் உள்ள போது, ஆளுநர் செல்கிறார், விசாரிக்கிறார் என்றால் என்ன அர்த்தம். அந்த வழக்கை ஒன்றுமில்லாமல் மாற் றவும், அதனை மறைப்பதற்கா கவும் தான் போகிறார். அதிகாரிகள் பார்க்கும் போது ஆளுநரே அவருடன் இருக்கிறார் என அச்சப்படுவார்கள். பல குற்றங் களை அடுக்கடுக்காக செய்து கொண்டிருக்கும் ஆளுநர் ஆர். என்.ரவி, இதிலும் தனது சுய உருவத்தை காட்டி பாஜக அரசி யலை இதிலும் நடைமுறைபடுத் துகிறார். இதன் காரணமாக தான் மாணவர்கள், அவரை எதிர்த்து போராட்டத்தை நடத்தி வருகின்ற னர் என்றார்.