அவிநாசி, ஜூன் 23 - கோவையில் நடைபெற்ற ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டி யில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக் கங்களை வென்று அவிநாசி வீரர்கள் சாதனை படைத்தனர். இவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரி வித்தனர். ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டி கடந்த வாரம் கோவை சரவ ணம்பட்டி குமரகுரு கல்லூரி வளாகத் தில் நடைபெற்றது. இதில் அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சிக்கு உட் பட்ட அவிநாசிலிங்கம்பாளையம் பகு தியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் 75 கிலோ பிரிவில் ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ், டெட் லிப்ட் ஆகிய உள் பிரிவு களில் தலா 4 தங்கப் பதக்கங்களும், அவிநாசி நாயக்கன்தோட்டம் பகுதி யைச் சேர்ந்த சந்தோஷ் 150 கிலோ பிரிவில் வெள்ளியும், ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ் ஆகிய உட்பிரிவுகளில் தங்கம், டெட் லிப்ட் பிரிவில் வெண்க லமும் என 4 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். இதையடுத்து அவிநாசி வந்த வீரர் கள் இருவருக்கும் சமூக ஆர்வலர்கள் மாலை சூட்டி மேளதாளம் முழங்க அவிநாசி புதிய பேருந்து நிலையத் தில் இருந்து பழைய பேருந்து நிலை யம் வரை ஊர்வலமாக அழைத்துச் சென்று பாராட்டுத் தெரிவித்தனர்.