கோவை, ஜூன் 3– காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள் ளதால் காற்றாலை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 2 ஆயிரம் மில் லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக காற் றாலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ள னர். மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற் றல் (Renewable Energy) உற்பத்திதுறை முக்கிய பங்கு வகிக்கின்றன. மின் நுகர்வு மற்றும் தேவை அதிகரித்து வரும் நிலை யில், காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின் சாரம் பெரிதும் உதவி செய்கிறது. தமிழ கத்தில் 8 ஆயிரத்து 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத் தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வழக்கமாக ஏப் ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு மாதத்திற்கு முன்னரே மார்ச் 15 ஆம் தேதியில் இருந்தே காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் துவங் கியுள்ளது. இதனால் கடந்த இரண்டு மாதங் களாக காற்றாலைகள் மூலம் அதிக மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது காற் றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, இந்திய காற்றாலை மின் உற் பத்தியாளர்கள் சங்கத்தின் (IWPA) தலை வர், கஸ்தூரி ரங்கையன் கூறுகையில், தமி ழகத்தில் தினசரி மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. காற்றா லைகள் சீசன் துவங்கியுள்ள காரணத்தால் தினசரி மின் நுகர்வில் காற்றாலைகள் அதிக பங்களிப்பு செய்து வருகின்றன. குறிப்பாக கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டும் ஆயிரத்தி 910 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட் டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40 மில்லியன் யூனிட் மின்சாரம் இந்த ஆண்டு காற்றாலைகள் மூலம் அதிகம் கிடைத்துள் ளது. எதிர்வரும் மாதங்களிலும் அதிக காற்று வீசும் என்ற காரணத்தினால் தினசரி மின் நுகர்வில் காற்றாலை மின் உற்பத்தியின் பங்கு தொடர்ந்து அதிகரிக்கும், என நம் பிக்கை தெரிவித்தார்.