districts

நீலகிரி: சாலையோரம் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

உதகை, ஜூலை 1- நீலகிரி மாவட்ட மலைப்பகுதி வழியாக செல்லும் சாலையோரம் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரிலிருந்து மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மசினகுடி வழியாக உதகைக்கு சாலை செல் கிறது. புலிகள் காப்பக பகுதியில் இந்த சாலை கள் செல்வதால் தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள், பேருந்துகள் சென்று வருகின் றன. மேலும், முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதி வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்வ தால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வன விலங்குகளை காண இங்கு வருகிறார்கள். இதையொட்டி வனத்துறை சார்பில் இயக்கப் படும் வாகனங்களில் பயணம் செய்து வன விலங்குகளை சுற்றுலா பயணிகள் கண்டு  ரசித்து வருகின்றனர். ஆனால், பெரும்பா லான நேரங்களில் வனத்துறையினர் அழைத் துச் செல்லும் பாதையில் வனவிலங்குகள் நட மாட்டம் இருப்பது இல்லை. இதனால். சுற் றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்த னர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோடை வறட்சியால் முதுமலை புலிகள் காப்பகம் பசு மையை இழந்து காணப்பட்டது. இதனால், வன விலங்குகளின் நடமாட்டமும் குறைவாக இருந்தது. தற்போது பருவ மழை பெய்து வரு வதால், வனவிலங்குகளுக்கு தேவையான பசுந்தீவனமும் தட்டுப்பாடின்றி கிடைக்கி றது. அதன் காரணமாக வனவிலங்குகள் நட மாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் முது மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மான் கூட் டம், காட்டெருமை கூட்டம், யானை கூட்டம் மயில்கள் என வனவிலங்குகளை கண்டு  ரசித்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள்  வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்ச ரித்துள்ளனர்.

கோத்தகிரியில் கரடி உலா 

கோத்தகிரி அருகே உள்ள கன்னிகாதேவி காலனி பகுதியில் 2 குட்டியுடன் சாலையில் பெரிய கரடி ஒன்று உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்திய வாகன ஓட்டிகள், தங்களது செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட னர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறு கையில், இந்த கரடி பல மாதங்களாக இங்கு  தான் சுற்றி திரிகிறது. குட்டிகளுடன் இருப்ப தால் மக்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் சாலைகளில் குட்டிகளுடன் உலா  வரும் கரடிகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள்  விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.