பென்னாகரம், ஜூலை 11- கர்நாடகா, கேரளா மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவ தால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைக ளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக் கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந் ததை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரள மாநிலத்தின் வயநாடு உள் ளிட்ட பகுதிகளிலும், கர்நாடக மாநிலத்தில், குறிப்பாக மலை மாவட்டங்களான குடகு, சிக்கமங்களூரு, ஹாசன், சிவமொக்கா உள் ளிட்ட மாவட்டங்களிலும், பெங்களூரிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணை களும் முழுமையாக நிரம்பிய நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருவி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி, கபினி அணையில் இருந்து 38 ஆயிரம் கன அடி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 72,713 கன அடி நீரும் என மொத்தமாக 1 லட்சத்து 10 ஆயிரத்து 964 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் கர்நாடகா தமிழக எல்லை யான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற் றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக் கலுக்கு வந்தடைந்தது. சனியன்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதி கரிக்க தொடங்கியது. அதன்படி ஞாயிறன்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. ஞாயிறன்று மாலை 5 மணி நிலவரப்படி ஒக் னக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒகே னக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும், மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையின் மேலே மூணு அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள் ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவா யில் பூட்டி சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணி யில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து போலீசார், தீயணைப்பு படையினர், வரு வாய் துறையினர் ஒகேனக்கல் காவிரி கரை யோரபகுதியில் தீவிர ரோந்து சென்று, கண் காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கரையோர பகுதிகளான ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம் நாகமரை உள்ளிட்ட பகு திகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக் குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.