districts

img

ஆழியார் கவியருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை, ஜன.10- மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில்  பெய்து வரும் கனமழையால், ஆழியார் கவி யருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோவை மாவட்டம், ஆனைமலை புலி கள் காப்பகத்திற்கு உட்பட்ட மலை பகுதியின்  அடிவாரத்தில் பொள்ளாச்சி வால்பாறை மலைபாதையில் அமைந்துள்ளது ஆழி யார் கவியருவி. கோவையின் முக்கிய  சுற் றுலா தலமாக விளங்கும் இந்த அருவிக்கு,  தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகு தியில் பெய்து வரும் கனமழையால், ஆழி யார் கவி அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, கவியருவி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அருவியில்  தண்ணீர் வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக் கப்பட்டுள்ளது.