districts

img

பசுமையாக மாறிய பர்கூர் மலைப்பகுதி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஈரோடு, நவ.5- தொடர் மழையின் காரணமாக பர்கூர் மலைப்பகுதி பசுமையாக மாறியுள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அந்தியூர் அடுத்த பர்கூர் மலை, மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஆகும். இந்த மலைப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்து  வருகிறது. பர்கூர் மலைப்பகுதியில் பெய்த மழைநீர் காரணமாக  வரட்டுப்பள்ளம் அணை கடந்த மாதம் 22  ஆம் தேதி முழு கொள்ளளவான 33.48 அடியை எட்டி யது.  இந்தநிலையில், தொடர் மழையால் பர்கூர் மலைப் பகுதி பசுமை போர்த்தியதுபோல் காட்சியளிக்கிறது. இதுமட்டுமின்றி தொடர்மழையால் காட்டாறுகள் பாய்ந்த வெள்ளம், பாறை இடுக்குகளில் வழிந் தோடி பல திடீர் அருவிகள் தோன்றியுள்ளன. மலை  முகடுகளில் மேக கூட்டங்கள் நின்று செல்கின்றன. உதகை,  கொடைக்கானலை போல் குளிர்ச்சி நிலவுவ தால் பர்கூர் மலை அழகை காணவரும் சுற்றுலா பயணி களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.