districts

தென்னையில் இலை கருகல் நோய் அதிகரிப்பு காய்ப்புத்திறன் குறையும்; விவசாயிகள் வேதனை

கோவை, டிச.3- பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியில் தென்னை மரங்க ளில் இலை கருகல் நோய் பரவல் அதிகரித்துள்ளதால், காய்ப்புத் திறன் பாதிக்கப்படும் அபாயம் ஏற் பட்டுள்ளது. கோவை மாவட்டம், நெகமம் மற் றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள  விவசாய நிலங்களில் பெரும்பான் மையாக தென்னையே சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் தவறாமல் பெய்யும் பருவமழை மற் றும் கோடை மழையின்போது, வறட்சி காலத்தில் வாடி வதங்கிய தென்னை மரங்கள் செழிப்புடன் இருப்பதை காண முடியும். ஆனால் கடந்த சில  ஆண்டுகளாக வெள்ளை ஈ தாக்குதல் காரணமாக இலை கருகல் நோய் ஏற் பட்டு தென்னை மரங்கள் பாதிக்கப் பட்டு வருகிறது. இதனால் அந்த தென்னை மரங்களை வெட்டி சாய்க்க  வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது சில கிராமங்களில் தென் னையில் ஏற்படும் இலை கருகல் நோயால் பெரும் பாதிப்பு நிலவுகி றது. அதிலும் குறிப்பாக செட்டியக் காபாளையம், எம்மேகவுண்டன் பாளையம், வடக்கு காடு, குருநல்லி பாளையம், கப்பளாங்கரை உள் ளிட்ட பல்வேறு கிராம பகுதிகள் பாதிப் பில் சிக்கியுள்ளது. அதிலும், மழை அதிகம் பெய்யும்  கிராம பகுதியில் விளைந்துள்ள தென்னை மரங்களே இலை கருகல் நோயால் அதிகளவில் பாதிக்களப் பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டில் கோடை மழைக்கு பிறகு, தென்மேற்கு பருவமழையும், அதன்பின்னர் வடகிழக்கு பருவ மழையும் அடுத்தடுத்து பெய்திருந் தாலும், பல்வேறு கிராமங்களில் தென்னை மரங்களில் ஏற்பட்ட இலை கருகல் நோயை கட்டுப்படுத்த முடி யாமல் விவவசாயிகள் தவிக்கும்  நிலை ஏற்பட்டுள்ளது. எப்போதும் இல் லாத வகையில், இந்த ஆண்டில் கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு, கிரா மங்களில் பார்க்கின்ற இடமெல்லாம் பச்சை பசேல் என தென்னை மரங்கள் செழித்தோங்கி இருந்தாலும், இலை கருகல் நோய் மட்டும் கட்டுப்படுத்த முடியாத வகையில் இருப்பது அப் பகுதி விவசாயிகளுக்கு கடும் வேத னையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தென்னை விவசாயி கள் கூறுகையில், ஒரு சில மரங்களில் ஏற்படும் இலை கருகல் நோயானது, அடுத்தடுத்துள்ள மரங்களில் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தி லேயே நோயை முழுமையாக கட் டுப்படுத்தினால் மட்டுமே, அடுத்த கட்டத்துக்கு செல்வதை தவிர்க்க  முடியும். எனவே, வேளாண்மைத் துறை அதிகாரிகள் முன்வந்து, கருகல் நோயை கட்டுப்படுத்த சிறப்பு  முகாம் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென் றால் தென்னையில் காய்ப்புத்திறன் நின்றுவிடும் என வேதனை தெரிவித் தனர்.