உதகை, ஜூலை 12- மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், அப்பர் பவானி அணைக்கு நீர்வரத்து அதிக ரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர் பவானி, எமரால்டு, கெத்தை, அவலாஞ்சி, குந்தா, பைக்காரா உள்ளிட்ட 13 அணைகள் மற்றும் 30 தடுப்பணைகள் உள்ளன. இந்த அணைகளில் பருவமழையின் போது தண்ணீர் தேக்கி வைக் கப்படுகிறது. இதை பயன்படுத்தி 12 மின் நிலையங்களில் சுமார் 800 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்படு கிறது. நீலகிரி மாவட்டத்தில் அப்பர் பவானி அணைதான் மிக வும் பெரிதாகும். இந்த அணை 210 அடி கொள்ளளவு கொண் டது. கடல் மட்டத்தில் இருந்து 7 ஆயிரத்து 470 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மேலும், இந்த அணை குந்தா நீர் மின் திட் டத்தின் முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவ மழை, கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டம் உட்பட தமிழ கம் முழுவதும் தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக அப் பர் பவானி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தினமும் சராசரியாக 50 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்து வருவதால் அப் பர் பவானி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் மூலம் 210 அடி கொள்ளளவு கொண்ட அப்பர் பவானி அணை யில் தற்போது சுமார் 170 அடி உயரம் வரை தண்ணீர் உள் ளது. இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கெத்தை உட் பட அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வருகி றது. இதனால் மின்சார உற்பத்தியும் அதிகரிக்க வாய்ப்புள் ளது. சோலையாறு அணை நிரம்பியது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்துள்ள வால் பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, வால்பாறை அருகே உள்ள 160 அடி கொண்ட சோலையார் அணை 163.49 அடியை எட்டியது. தற்பொழுது அணைக்கு நீர் வரத்து 6 ஆயிரத்து 916 கன அடியாகவும், அணையிலிருந்து நீர் வெளியேற்றம் 5 ஆயிரத்து 423 கன அடியாகவும் உள்ளது. தொடர்ந்து நீர்வ ரத்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையின் மூன்று மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற் றப்பட்டு வருகிறது. இதனால் வால்பாறை பகுதி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கவியருவில் இருந்து வரும் தண்ணீர் நேரடியாக ஆழியார் அணைக்கு செல்வதால் அணைக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. இதனால், ஆழியார் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 120 அடி கொண்ட ஆழியார் அணை தற் பொழுது 96 அடியை எட்டியுள்ளது.