திருப்பூர், நவ. 2 - திருப்பூர் சிவா டெக்ஸ்டைல்ஸ் ஜவுளிக் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகை யில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தப் பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக சரவணன் என்பவர் உள்ளார். இந்நிலையில் இந்த நிறுவனங்களில் புதன்கிழமை காலை முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட னர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன் சாலை, கோர்ட் வீதி சந்திப்பில் அமைந்தி ருக்கும் சிவா டெக்ஸ்டைல்ஸ் ஜவுளி கடையி லும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி நிறுவன செய்தியாளர் துரைராஜ் படமெடுத்தபோது வருமான வரித் துறை அலுவலர் அவரது செல்போனை பறித்து வைத்திருக்கிறார். இதையடுத்து அவருடன் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் சம்பவ இடத் துக்கு வந்து சமரசம் செய்து வைத்தனர்.