districts

img

உதகையில் தொடர் மழை மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை, ஜன.9- நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் உள்ள மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் உதகை மலை ரயில் சேவை தடைபட்டது. நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் கடும் குளிருடன் பனியும் பொழிந்து வருகிறது. இந்நிலையில் செவ்வாயன்று காலை குன்னூர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ஓட்டு00000 பட்டறை, மவுண்ட்பிளசண்ட், ஆகிய இடங்களில் சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடங்க ளுக்கு சென்று மரங்களை அகற்றி போக்குவரத்தை சரிப்படுத்தினர். இதேபோன்று, ஹில்குரோவ் பகுதியில் தண்டவா ளத்தில் மரம் விழுந்து லேசான மண் சரிவு ஏற்பட்டதால், குன்னூருக்கு மலை ரயில் 2 மணி நேரம் தாமதமாக வந்தது. கடும் குளிர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. காட்டேரி  அடுத்த நந்தகோபால் பாலம் பகுதியில் சாலையோரம்  பாறைகளுடன் மண் சரிவு ஏற்பட்டது. இதைய டுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொக்லைன் எந்தி ரம் மூலம் அகற்்றினர்.