districts

img

தொல்குடியினர் வேளாண் மேலாண்மை திட்டம் துவக்கம்

நாமக்கல், மார்ச் 6- தொல்குடியினர் வேளாண் மேலாண்மை திட்டத்தை நாமக்கல் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில், தொல்குடியினர் வேளாண் மேலாண்மை திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக இலச்சினையை வெளியிடப்பட்டது. பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்  என்.கயல்விழி செல்வராஜ் பங்கேற்றார்.  இதில், இத்துறையின் அரசு செயலாளர்  ஜி.லட்சுமி பிரியா  தலைமை ஏற்றார். இதில், மாவட்ட ஆட்சியர் ச.உமா, நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் எ.கே.பி.சின்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில், ரூ.6.63 கோடி மதிப்பில் 672 பயனாளிகள் மற்றும் 7,000 விவசாய பெருமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக, அரசு திட்டங்களை செயல்படுத்தும் பொருட்டு 6 அரசு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்  முன்னிலையில் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.