districts

img

சேலம் மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடை துவக்கம்

சேலம், ஏப்.10- தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின், அங்கமாக சேலம் மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடை அமைக்கப்பட்டுள்ளது.  சேலம் மாநகரம் சுனில் மைத்ரா நினைவகத்தில் நடைபெற்ற சிறப்பு பேரவை கூட்டத்திற்கு, எம்.சேது மாதவன் தலைமை ஏற்றார். என்.பிர வீன் குமார் வரவேற்றார். அமைப் பின் நோக்கம் குறித்து மாநில ஒருங் கிணைப்பாளர் க.உதயகுமார் பேசி னார். பேரவையை வாழ்த்தி சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மறை மாவட்டம் முதன்மை குரு டி. மைக்கேல் ராஜ் செல்வம், ஹாதியா மகளிர் கல்லூரி முதல்வர் பைசர் புகாரி, சிபிஎம் மாவட்ட செய லாளர் மேவை.சண்முகராஜா, சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஆர்.பி.பாஸ்கர், விசிக மாவட்ட பொருளாளர் ஐ.காஜா மைதீன், அஸ்தம்பட்டி பள்ளிவாசல் பொருளாளர் எ.சௌகத் அலி, மமக மாவட்ட தலைவர் ஷேக் முகமது, எழுத்தாளர் இலா.வின்சென்ட், தமு எகச மாவட்ட பொருளாளர் ஷேக் அப் துல்லா ஆகியோர் வாழ்த்தி உரை யாற்றினர். இப்பேரவையில், இந்திய திரு நாட்டின் இனம் மொழி பண்பாடு கலாச்சாரம் கொண்ட வேற்றுமை யில் ஒற்றுமை என்ற நிலைபாட்டை தொடர்ந்து நிலை நிறுத்த வேண்டும். முற்போக்கு பகுத்தறிவு இடதுசாரி சிந்தனையாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் தாக்குதல் களை கண்டித்தும், வேலையில்லா திண்டாட்டம், பசி பட்டினி வறுமை சுகாதார சீர்கேடு கல்வி மறுப்பு சமூக நீதி மறுப்பு ஒட்டுமொத்த அரசு இயந் திரம் அனைத்தும் காவி மயம் தனி யார் மையம் ஏழை மக்கள் மீது  கடுமையான வரி விதிப்பு பணக்காரர் களுக்கு வரிச் சலுகை கடன் தள்ளு படி போன்ற மக்கள் விரோத நடவ டிக்கைக்கு காரணமான ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும்,  கடவுள் பெயரால் மதத்தின் பெயரால் மக் களை திட்டமிட்டு திசை திருப்பும் வகுப்புவாத பாஜகவின் நடவடிக்கை களை கண்டித்தும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. முன்னதாக,  மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளராக எம்.சேது மாதவன் உள்ளிட்ட 27  பேர் கொண்ட மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பு குழு தேர்ந் தெடுக்கப்பட்டது.