கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் ரூ.3.10 கோடி மதிப்பீட்டிலான புதிய கட்டிடம் திறப்பு
கோவை, டிச.30- கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை சென்னையி லிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். கோவை ரயில் நிலையம் சாலையில் கோவை தெற்கு தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் மூலம் கோவை மாவட்ட மாதிரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் கட்டப்பட்டு வந்தது. ரூ.3.10 கோடி மதிப் பீட்டில் 4 மாடி கொண்ட இந்த கட்டிடத்தில் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் அலுவலகம், கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட தீயணைப்பு துறை அலுவலகங்கள் கட்டப்பட்டன. இதன் திறப்பு விழா வியாழனன்று நடைபெற்றது. சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் புதிய கட்டிடத்தை பார்வையிட்டார். இதில், வானதி சீனிவாசன் எம்எல்ஏ, தீயணைப்பு நிலைய மாவட்ட அலுவலர் அண்ணாதுரை, உதவி மாவட்ட அலுவலர் அழகர் சாமி, நிலைய அலுவலர் சிவராஜ் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள், தீயணைப்பு படை வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு
சேலம், டிச.30- சேலம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமை தொழிலாளர்களாக இருந்தவர்களை அதிகாரிகள் மீட்டனர். சேலம் மாவட்டம், வெள்ளையம்பட்டி கிராமத்தில் தங்க ராஜ் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இதில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மணி, அவரது மனைவி சத்யகலா, மகள் அகிலா மற்றும் மகன் ஐயப்பன் ஆகியோர் கொத்தடிமைகளாக உள்ளதாக அதி காரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேலம் உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட் சியர், தொழிலாளர் நல உதவி ஆணையர், சேலம் வட்டாட் சியர், மண்டல துணை வட்டாட்சியர், வலசையூர் வருவாய் ஆய்வாளர், குப்பனூர் கிராம நிர்வாக அலுவலர் ஆகி யோர் தங்கராஜின் செங்கல் சூளையில் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது, செங்கல் சூளையில் கொத்தடிமை களாக இருந்த நபர்களை அதிகாரிகள் மீட்டனர். மேலும், மீட்கப்பட்ட நபர்களுக்கு கொத்தடிமை நிவாரண நிதி பெற்று வழங்கவும், அவர்களது மறுவாழ்விற்கும் தேவை யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடந்து சென்ற நபரிடம் செல்போன் பறிப்பு
திருப்பூர், டிச.30 - திருப்பூரில் பாதையில் நடந்து சென்ற நபரிடம் செல் போனை பறித்து சென்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மங்க ளம் சாலையில் செல்போனில் பேசிக்கொண்டு நடந்து சென்ற நபரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரி டம் இருந்த செல்போனை பறித்து கொண்டு சென்றுள்ளனர்.அந்த நபர் திருடன் திருடன் என்று கூச்சலிடவே அவனை துரத்திய பொதுமக்கள் குமரன் சாலை அருகே மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.சம்பவம் குறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செல்போன் பறித்து சென்றவர்களி டம் விசாரணை மேற்கொண்டதில் திருப்பூர் கல்லூரி சாலையை சேர்ந்த விஜய், பிரவீன் என்பதும் அவர்கள் ஓட்டி வந்த வாகனமும் கர்நாடகா எண் கொண்ட திருட்டு வாகனம் என தெரிய வந்தது. இதைதொடர்ந்து இருசக்கர வாகனத் தையும்,செல்போனையும் பறிமுதல் செய்து விஜய்,பிரவீன் ஆகிய இருவரையும் திருப்பூர் மத்திய காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கஞ்சா விற்ற இருவர் கைது, 10 கிலோ கஞ்சா ரூ.80 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
தாராபுரம், டிச.30- தாராபுரம் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை தாராபுரம் மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து சிறை யில் அடைத்தனர். தாராபுரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் கோவர்த்த னாம்பிகை, மதுவிலக்கு போலீசார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மத்திய நுண்ணறிவுப் பிரிவு, காவல் துணை கண்கா ணிப்பாளர் காசிவிஷ்வநாதர், காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோருடன் இணைந்து கஞ்சா விற்பனை தடுப்பு நடவடிக் கையாக தாராபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பொள் ளாச்சி சாலை, எல்லீஸ் நகர், மின்வாரிய அலுவலகம் ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் வாகனங்களில் வந்த 2 நபர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர் கள் தங்களது பெயர், விலாசங்களை முன்னுக்குப்பின் முர ணாக கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் ஓட்டி வந்த இரண்டு இருசக்கர வாகனங்களையும் சோதனை மேற்கொண்டதில் 10 கிலோ கஞ்சா மற்றும் ரூ.80 ஆயிரம் இருந் தது. இதையடுத்து இரண்டு பேரையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் திண்டுக் கல் மாவட்டம், சாணார்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி கிழக்கு வீதி பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவரது மகன் கணேசன் (40), பல்லடம் அண்ணாநகர், மஹாவிஷ்ணு நகர் பகுதியைச் சேர்ந்த ராசுதேவர் என்பவரது மகன் கிருஷ்ணன் (51) என்ற விபரம் தெரிவந்தது. மேலும் கணேசன் என்பவர் திண்டுக் கல் மாவட்டம் நத்தம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் கைதாகாமல் தலைம றைவாக இருந்தவர் எனவும் தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பின்னர் அவர்கள் கஞ்சா விற்பனை செய்ய பயன்படுத்தி வந்த இரண்டு இரு வாகனங் கள், 10 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ. 80,000 ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவ ரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தனர்.
தாராபுரம் வளர்ச்சி பணிகளுக்கு 2.73 கோடி நிதி: நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்
தாராபுரம், டிச. 30- தாராபுரம் நகராட்சி தினசரி மார்க் கெட் கட்டிடம் மற்றும் மின் விளக்கு உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு ரூ.2 கோடியே 73 லட்சம் நகர்மன்ற கூட்டத் தில் நிதி ஒதுக்கி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தாராபுரம் நகராட்சி தலைவர் கு. பாப்பு கண்ணன் தலைமையில் மன்ற கூட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, துணைத்தலைவர் ரவிச்சந்திரன், ஆணையர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சி லர்களின் பேசியதாவது: ராஜேந்திரன் (திமு.க): எனது வார் டில் தூய்மை பணியாளர்கள் வருவ தில்லை. குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளது, என்றார். உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்படும், என தலைவர் தெரிவித்தார். முபாரக்அலி (திமுக): எனது வார் டில் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. பள்ளி செல்லும் குழந்தை கள் கூட நாய்கடிக்கு உள்ளாகி மருத் துவமனைக்கு சென்றுள்ளனர். நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றார். தலைவர் தெரு நாய்களை பிடிக்க அரசுக்கு எழுதியுள்ளோம். விதிமுறைக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். யூசுப்(திமுக): கடந்தகூட்டத்தி லேயே பேருந்து நிறுத்ததில் அடுத் தடுத்து உள்ள இரண்டு வாடகை கடைகளை குத்தகைதாரர் இடித் துள்ளார். இதுசம்பந்தமாக என்ன நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டார். தலைவர் சம்மந்தப்பட்ட நப ருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள் ளது. பதில் வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சீனிவாசன்(திமுக) : எனது வார் டில் குளத்து புஞ்சை தெரு அருகே யுள்ள மழைநீர் வடிகால் முற்றிலும் பழுதடைந்துள்ளது. அதை சரிசெய் ய வேண்டும் என்றார். தலைவர் நட வடிக்கை எடுக்கப்படும் என்று கூறி னார். நாகராஜ் (அதிமுக): எல்.இ.டி லைட் பொருத்தும் பணி எப்போதும் தொடங்கும் என கேட்டார். தலைவர் லைட் சப்ளை வந்துவிட்டது உடனடி யாக பொருத்தப்படும் என்றார். ஸ்ரீதரன் (திமுக): அமராவதி ரவுண்டனாவில்அமராவதி ஆற்றின் சிறப்பை வலியுறுத்தும் அமராவதி அன்ணை சிலை எப்போது அமைக் கப்படும். தலைவர் தனியார் பங்க ளிப்பை தவிர்த்து நகராட்சி சார்பி லேயே வைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது என்றார் இதைதொடர்ந்து தாராபுரம் நக ராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.2 கோடியே 73 லட்சம் நிதி, மின் விளக்கு கள் மற்றும் தினசரி மார்க்கெட் கட்டி டம் கட்ட நிதி வழங்கிய தமிழ் நாடு முதல்வருக்கும் அரசுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மன்ற பொரு ளாக 37 தீர்மானங்கள் வைக்கப்பட்டி ருந்தது. அவை அனைத்தும் நிறை வேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப் பினர்கள் ராஜேந்திரன், ஹைடெக் அன்பழகன், எஸ்.டி.நாகராஜ், துரை சந்திரசேகர், முபாரக் அலி, உசானா பானு ஷேக்பரித், சக்திவேல், ஸ்ரீத ரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தும் பணிகள் தொடக்கம்
திருப்பூர், டிச.30- திருப்பூரில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிர மிப்பு செய்யப்பட்ட 30 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வருவாய் துறையினர் முன்னிலையில் இடித்து அப்புறப்படுத் தும் பணிகள் வெள்ளியன்று தொடங்கியது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்பு இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றை அப்புறப்படுத்த மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தனர். அதன் அடிப் படையில் வருவாய்த் துறையினர் முன்னிலையில் ஆக்கிர மிப்பு கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டது. திருப்பூர் ஜம் முனை பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் கணக்கெடுக்கப் பட்டு ஏற்கனவே இரண்டு முறை சம்பந்தப்பட்ட கட்டிடங் களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்படாமல் இருந் துள்ளது. இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வரு வாய்த்துறையினர் முன்னிலையில் இன்று அதிரடியாக ஆக்கி ரமிப்பு கட்டிடங்கள் அகற்றும் பணி நடைபெற்றது. ஜம்முனை ஓடையை ஒட்டியுள்ள பகுதிகளில் 25 உரிமையாளர்களுக்கு சொந்தமான மூன்று மற்றும் நான்கு மாடி கட்டிடங்கள் என சுமார் 30 கோடிக்கும் அதிக மதிப்பிலான ஆக்கிரமிப்பு கட்டிடங் களை இடிக்கும் பணி இன்று நடைபெற்றது. அசம்பாவித சம்ப வங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் வகையில் மாநகர காவல் துறை சார்பில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்தனர்.
கால்நடைகளைத் தாக்கும் பெரிய அம்மை நோய்: அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கு மருந்துகளை வழங்க வலியுறுத்தல்
திருப்பூர், டிச.30- பெரிய அம்மை நோய் கால்நடை களை தாக்கி வரும் சூழலில் அரசு கால்நடை மருத்துவமனைகளுக்குத் தேவையான அளவு மருந்துகளை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற விவசாயிகள் குறைத் தீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது. கால்நடைகளுக்கு உரிய காலத் தில் தடுப்பூசி செலுத்தவும், அரசு கால் நடை மருத்துவமனைகளுக்கு தேவை யான அளவு மருந்துகளை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயி கள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு சார்பாக ஆட்சியர் அலுவல கத்தில் வெள்ளியன்று மனு கொடுக் கப்பட்டுள்ளது. வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ். அப்புசாமி கொடுத்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது. திருப்பூர் மாவட் டத்தில் பரவலாகப் பெரிய அம்மை நோய் கால்நடைகளைத் தாக்கி வரு கிறது. இதனைதொடர்ந்து அவசர அவசரமாகத் தொற்று நோய் தாக்கிய பின்பு நடவடிக்கை எடுப்பதில் எந்த அளவிற்குப் பயனளிக்கும் என்று தெரியவில்லை. மேலும் இந்த தடுப் பூசி செலுத்துவதில் 21 நாட்களுக்குப் பின்பு தான் பலனளிக்கும் என்று தக வல் தெரிவிக்கப்படுகிறது. சென்ற வருடம் திருப்பூர் வடக்கு வாவிபா ளையத்தில் வாய்சப்பை கோமாரி நோய் தாக்குதலினால் பத்துக்கும் மேற்பட்ட கால்நடை உயிரிழப்பு ஏற் பட்டது. அந்த நிகழ்விற்குப் பின்பு தான் அனைத்து பகுதிக்கும் கால் நடைத்துறை மூலமாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்பொழுது பெரி யம்மை நோய் ஏற்பட்டு பல்வேறு கால்நடைகள் உயிரிழப்பு ஏற்பட்ட பின்பே அதன் வீரியம் அறிந்து அனைத்து பகுதிகளும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கால் நடைத்துறை அலுவலர்களிடம் எந் தெந்த காலத்தில் எந்த நோய் ஏற்படும் என்ற முழு விபரம் இருக்கும் நிலையில், உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்த தவறியதால் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் கால்நடைகளுக்கான பல்வேறு நோய்த் தொற்றுகள் மற்றும் அடிப் படை நோய்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் தேவையான அளவு கையிருப்பு இருப்பதில்லை. இதனால் விவசாயிகள் தனியார் மருத்துவமனையில் மருந்துகளை வாங்குவதால் அதிக செலவு ஏற் பட்டு பெரும் சுமையாக இருந்து வரு கிறது. எனவே, கால்நடைகளுக்கு ஏற்ப டும் தொற்று நோய்களுக்கு உரிய காலத்தில் தடுப்பு ஊசி செலுத்தப்படு வதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அரசு கால்நடை மருத்துவ மனைகளுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளைக் கையிருப் பில் வைப்பதற்கான உரிய நடவ டிக்கை எடுத்திட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:51.75/60அடி நீர்வரத்து:767கன அடி வெளியேற்றம்:310கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 89.10/90அடி. நீர்வரத்து:433கனஅடி வெளியேற்றம்:538கன அடி
ஆட்சியர் அலுவலகத்தில் சூதாட்டம்: அரசு வாகன ஓட்டுநர்கள் 17 பேர் இடமாற்றம்
சேலம், டிச.30- சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சூதாட்டத் தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்து வரும் 17 அரசு வாகன ஓட்டுநர்களை இடமாற்றம் செய்து உத்தர விடப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை, பள்ளிக்கல்வித்துறை, பத்திரப்பதிவுததுறை உள் ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. தினந் தோறும் பரபரப்பாக காணப்படும் இந்த அலுவலகத்தில் பணி யாற்றக்கூடிய ஊழியர்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் அமைந்துள்ள வாகன நிறுத்தும் இடத்தில் சூதாட் டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சேலம் மாநகர காவல் அங்கு ஆய்வு செய்தபோது, அங்கு ஒரு வாகனத்தில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அப்போது போலீசாரை கண்டதும் சூதாட்டத்தில் ஈடு பட்ட நபர்கள் அங்கிருந்து ஓடினர். இதன்பின் வாகனத்திலி ருந்த சீட்டு கட்டுகள் மற்றும் எவ்வளவு தொகை என்று குறிப்புகளை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண் டனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சூதாட்டத்தில் ஈடு பட்ட மற்றும் மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை யில் பணிபுரிந்து வரும் 17 ஓட்டுநர்களை இடமாற்றம் செய்து, ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரவிச்சந்திரன் உத் தரவிட்டுள்ளார்.
கருத்தரித்தல் மையத்திற்கு சீல்
ஈரோடு, டிச. 30- ஈரோட்டில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஸ்கேன் மையத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் சத்தி சாலையில் மகளிர் மருத்துவமனை மற்றும் ஐஸ்வர்யா செயற்கை கருத்தரித்தரிப்பு செய்யும் தனியார் மையம் உள்ளது. இங்கு உரிமம் இன்றி ஸ்கேன் மையம் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. அதனடிப்படையில் நடைபெற்ற ஆய்வில் குற்றச் சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேமகுமாரி தலைமையிலான குழுவினர் ஸ்கேன் மையத்திற்கு சென்றனர். அப்போது மருத்துவ மனை நிர்வாகத்தினர் உரிமம் பெற்றுள்ளதாகத் தெரி வித்தனர். ஆனால் மருத்துவத் துறை அதிகாரிகள் குழு குறிப்பட்ட தேதியில் அனுமதியின்றி ஸ்கேன் மையத்தை இயக்கியது குற்றம் எனக் கூறி சீல் வைத்தனா். இதுபோன்ற மருத்துவ குற்றங்கள் குறித்து புகார் வரு வதும், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதும் ஈரோடு மாவட் டத்தில் சாதாரணமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
கோத்தகிரி: 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
உதகை, டிச.30- கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவு பாதுகாப்பு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் மேனகா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனிடையே வியாழனன்று போலீசார் குஞ்சப் பனை சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த மினி லாரியை மறித்து சோதனை நடத்தினர். அப்போது, அதில் மூட்டை, மூட்டையாக ரேசன் அரிசி இருந்தது. இதையடுத்து ஓட்டுநர் ஜோசப் என்பவரை கைது செய்து, 2 டன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
வேளாண் துறையில் தற்காலிக பணி
ஈரோடு, டிச. 30- ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை – உழ வர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் அவ் வப்பொழுது ஏற்படும் காலிப்பணியிடங்க ளுக்கு நிரப்பப்படும். இப்பணியினை தனி யார் பணிநியமன முகமை மூலம் தற்காலிக மாக ஒப்பந்த அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிடப் பட்டுள்ளது. தகுதி வாய்ந்த பணிநியமன முகமை தேர்ந்தெடுக்கப்படவுள்ளது. விண் ணப்பங்களை ஜன.9 ஆம் தேதிக்குள் திட்ட இயக்குநர், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, வேளாண்மை துணை இயக்குநர் அலுவலகம், உழவர் பயிற்சி நிலையம், திண்டல்மேடு, வித்யாநகர், திண் டல், ஈரோடு.12 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளுக்கு புறம்பாக செயல்படும் தொழிற்சாலை மாவட்ட நிர்வாகம் துனை போவதாக குற்றச்சாட்டு
ஈரோடு, டிச.30- கொடுமுடி அருகே விதிமுறைகளுக்கு மாறாக செயல்படும் நார் தொழிற்சாலைக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகம் செயல்படுவ தாகப் புகார் எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், இச்சிபாளையத்தில் ஸ்ரீகொங்கு காயர் கிளஸ் டர் பி.லிட் என்ற தேங்காய் நார் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இதனால், அதன் சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் மாசுபட்டுள் ளது. மேலும், அங்கிருந்து வரும் தூசியாலும் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆலை செயல்பாடு தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும், இப்பிரச்சனை தொடர்பாக பல்வேறு முறையீடுகள் செய்யப்பட்டிருந்தது. இதுகு றித்து கிராம சபையிலும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இதனால், ஆலையை காலி செய்துவிடுவதாக அதன் உரிமையா ளர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், புதனன்று மாலை ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். அதில், மாநில அரசின் பரிந்துரையோடு ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் அமைக்கப் பட்ட ஆலையின் செயல்பாட்டை தடுத்ததாக வும், அதன் உண்மை தன்மையைக் கண்டறிய நடைபெறும் விசாரணை என குறிப்பிடப்பட்டி ருந்தது. இக்கூட்டத்திற்கு, பாதிக்கப்பட்ட மக் கள் சுமார் 100 பேர் சென்றனர். ஒன்றிய ஆளுங் கட்சியின் தரப்பினர் எனக் கூறப்படும் ஆலை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களை மனு எழு திக்கொடுத்துச் செல்லுமாறு அரசு தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. அதன்படி அரசு விதிகளுக்குப் புறம்பாக செயல்படும் ஆலையை கிராம சபை முடிவின் படி நிரந்தர தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், அரசு நிர்வாகம் மாசுபடுத் தும் ஆலைக்கு ஆதரவாக செயல்படுகிறதா? என்ற அச்சம் உள்ளதாகவும் அப்பகுதி மக் கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சாலைப்பணி: ஆய்வு
சேலம், டிச.30- மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், சேலம் மாவட்டம் சங்ககிரியிலி ருந்து பவானி செல்லும் சாலையில், சாமியார் தோட் டத்தில் இருந்து கவுண்டனூர் வரை, ரூ.5.1 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப்பணி, தடுப்புச்சுவர் கட்டுதல், வடி கால் கட்டுதல், குழாய் பாலம் அகலப்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெற்று வரு கிறது. அதேபோல், மகுடஞ்சா வடியிலிருந்து எடப்பாடி வழி யாக குமாரபாளையம் வரை ரூ.6.81 கோடி மதிப்பில், இரு வழிச் சாலை அகலப்படுத் துதல், மேம்படுத்தும் பணிகள் குறித்து, நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பரா மரிப்பு, சேலம் கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.