தருமபுரி, ஜன.5- தருமபுரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூல கம் மற்றும் அறிவுசார் மையம் வெள்ளி யன்று திறக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத் தின் கீழ், தருமபுரி நகராட்சி, சந்தைப்பேட்டை யில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத் தார். இதனைத்தொடர்ந்து இந்நூலகம் மற் றும் அறிவுசார் மையத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி குத்துவிளக்கேற்றி வைத்து, பார்வையிட்டார். மேலும், மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி னார். இந்த மையத்தில் வரவேற்பு அறை, மேலாளர் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் தனியே அமர்ந்து படிக்கும் இடம், குழந்தை கள் படித்து பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் அமையப்பெற்ற இடம் மற்றும் கூட்டரங்கமும், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் அனைத்து வசதிகளு டன் கூடிய வகுப்பறையும் வடிவமைக்கப் பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஏறக்குறைய 500 மாணவர்கள் படித்து பயன்பெறும் வகை யில் வடிவமைக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணாக்கர்களுக் கென வழிகாட்டுதலுடன் கூடிய பாட புத்த கங்கள், அறிவியல், இலக்கியம், வரலாறு, ஆராய்ச்சி கட்டுரைகள் என பல துறைகள் சார்ந்த புத்தகங்கள், மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு புத்தகங்கள் இம்மையத்தில் உள்ளது. மேலும் மையத்தில் கட்டுப்பாட்டு அறை கணினி வசதி, 5 எண்ணிக்கையில் கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி, மின்வசதி ஆகிய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள் ளது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, தரும புரி நகர்மன்ற தலைவர் மா.இலட்சுமி, துணைத் தலைவர் அ.நித்யா, வார்டு உறுப்பினர்கள், வட்டாட்சியர் ஜெயசெல்வம், நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நகராட்சி நிர்வாகம் பாரபட்சம் காட்டுகிறது?
தருமபுரி நகர சந்தை மைதானத்தில் நகராட்சி நிர்வாகத்தின் மூலமாக 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தினை மாவட்ட ஆட்சி யர் கி.சாந்தி மையத்தை பயன்பாட்டுக் காக திறந்து வைக்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்நிகழ்விற்கு திமுக வைச் சேர்ந்த 20 நகர்மன்ற உறுப்பினர் களுக்கு மட்டும் முறையான அழைப்பு கொடுத்த நகராட்சி நிர்வாகம், மற்ற 13 உறுப்பினர்களுக்கு முறையான அழைப்பு கொடுக்கப்படவில்லை என கூறப்படு கிறது. இதனால் தாங்களாகவே வந்து கலந்து கொண்டதாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை நகராட்சி நிர்வாகம் வேண்டும் என்றே புறக்கணிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.