districts

img

கவிஞர் ராமலிங்கம் பிள்ளை மார்பளவு சிலை திறப்பு

நாமக்கல், ஜன.23- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் நினைவு இல்லத்தில், அவரது மார்பளவு சிலையை காணொளி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரி வளா கத்தில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கவிஞரின் உருவச்சிலை, தமிழக  இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் திறந்து வைக் கப்பட்டது. அப்போது, கவிஞரின் குடும்பத்தினர், அவா் வாழ்ந்த இல் லத்தில், தற்போது நூலகமாக செயல் படும் மையத்தில் மார்பளவு சிலை  ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரிடம் வைத் தனர். இதனையடுத்து, அவரது உத் தரவின்பேரில் ரூ.20 லட்சம் மதிப்பீட் டில் நாமக்கல் கவிஞருக்கு சிலை  உருவாக்கப்பட்டது. அவரது இல்ல  நுழைவாயில் அருகில் பீடம் அமைக் கப்பட்டு சிலை நிறுவப்பட்டது. தமி ழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திங்க ளன்று காணொளி மூலம் கவிஞரின் சிலையைத் திறந்து வைத்தார். அங்கு நடைபெற்ற விழாவில், மாநிலங்க ளவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியர் ச.உமா, சட்டமன்ற உறுப்பினர் பெ. ராமலிங்கம், நாமக்கல் கவிஞரின் பேரன் பழனியப்பன் மற்றும் குடும் பத்தினர் கலந்து கொண்டனர். சிலையைத் திறந்து வைத்த முதல்வருக்கும், அதற்கான உத்த ரவை வழங்கிய அமைச்சருக்கும் கவிஞரின் குடும்பத்தினர் நன்றி தெரி வித்தனர். அப்போது, மாவட்ட ஆட்சி யர் ச.உமா தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூல்களை, நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் து.கலாநிதி, துணைத்தலைவர் செ.பூபதி, நகர் மன்ற உறுப்பினர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.