districts

img

பார்வையற்றோர் வேலைவாய்ப்பு தொழிற்பயிற்சி மையம் துவக்கம்

கோவை, ஆக.26- கோவையில் முதல் முறையாக பார்வையற்றோர் வேலை வாய்ப்பு தொழிற்பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார். கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் பகுதியில், ரோட்டரி கிளப் ஆப் கோய முத்தூர் ஸ்மார்ட் சிட்டி, தேசிய பார்வையற்றோர் கூட்ட மைப்பு இணைந்து, கோவையில் முதல் முறையாக பார்வை யற்றோர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை துவக்கியுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சனியன்று துவக்கி வைத்து, பார்வையிட்டார். இதில், 20 பார்வையற்ற மாணவர்கள் தற்போது உள்ளனர்.  அவர்களுக்கு மூன்று மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், இவர்களுக்கு தங்கும் இடம், உணவு ஆகிய வையும் இலவசமாக வழங்கப்படுகிறது. இவர்களுக்கு இங்கு  கணினி பயிற்சி அளிக்கபடுகிறது. மூன்று மாத பயிற்சி நிறைவு  பெற்ற பின்பு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சான்றிதழ்  அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள பயிற்சியாளர் சாம்கார்த்திக் என்பவரும் பார்வைத் திறன் அற்றவர் ஆவார். இவர் கண்டுபிடித்த செயலியின் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அச்செயலி மூலம் ஒவ்வொரு செயல்பாடும் ஒலியாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கணினியை கையாளுவது எளிமையாக இருக்கக் கூடும். இதைத்தொடர்ந்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தி யாளர்களிடம் கூறுகையில், இங்கு பார்வையற்றோருக்கு பொதுத்தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், கூடுதல் சிறப்பம்சமாக வேலை வாய்ப்பு பயிற்சி  மையமும் துவங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து நடத்தப்படும். வாரந் தோறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளில் அவர்களின் திறமைகளை கண்ட றிந்து வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும். மேலும் எந்தத் தன்னார்வ அமைப்புகள் இது போன்ற முன்னெடுப்புகளை முன்னெடுக்கும் பொழுது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒத்துழைப்பு நல்கப்படும், என்றார்.