districts

img

ரூ.1.05 கோடியில் நவீன பிரேத பரிசோதனைக் கட்டடம் திறப்பு

சேலம், ஜன.22- ஏற்காட்டில் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்ட நவீன பிரேத பரிசோதனைக் கட்டடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத் தார். சேலம் மாவட்டம், ஏற்காடு அரசு மருத்துவ மனையில் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன பிரேத பரிசோதனைக் கட்டடத்தினை, மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்களன்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவக் கட்டமைப்புகளை திறந்து வைப்பதற்கு வருகை தந்தபோது, ஏற்காடு அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இம்மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோ தனை மையம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக  பயன்பாட்டில் இல்லாதது தெரியவந்தது. இத னால் இப்பகுதி மக்கள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் சேலம் அரசு மருத்து வமனைக்கு எடுத்து வந்து பரிசோதனை செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனை முதல் வரின் கவனத்திற்கு இப்பகுதி மக்களின் கோரிக் கையை எடுத்துச் சென்றவுடன், கடந்த நிதிநிலை அறிக்கையில் நவீன பிரேத பரிசோதனை மையம் அமைப்பதற்கான நிதியினை முதல்வர் ஒதுக்கீடு செய்தார். தற்போது ஏற்காடு அரசு மருத்துவமனை யில் நவீன பிரேத பரிசோதனை மையம் அமைப்ப தன் மூலம் ஏற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராம மக்களுக்கு பெரிய அளவில் உதவி யாக இருக்கும். அந்தவகையில், வரும் காலங்களில் பிரேத பரிசோதனை செய்வதற்காகும் கால தாமதத்தைத் தவிர்க்கும் வகையில், ஏற்காடு அரசு மருத்துவ மனையில் 6 அறைகளுடன் கூடிய பிரேத குளிர் பதன கிடங்கு, பிரேத பரிசோதனை அறை, மருத்து வர் அறை, கருவிகள் கிடங்கு அறை மற்றும் கழிப் பறை வசதிகளுடன் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள நவீன பிரேத பரிசோதனைக் கட்டடம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள் ளது, என்றார். இந்நிகழ்வில், நலப்பணிகள் இணை இயக்குநர் மு.வளர்மதி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ச.சௌண்டம்மாள், மாநகர் நல அலுவலர் ந.யோகானந்த் மற்றும் மருத்து வர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பலர் உட னிருந்தனர்.