districts

நரகத்தின் கதவுகள்... - மூர்த்தி சுந்தர்

சொந்த தேசத்தில்
அவர்களுக்கான
இடம்
எதுவென
கரசேவகர்கள்
இடித்துஇடித்துக்
காட்டுகிறார்கள்.

நரகத்தின்
கதவுகள்
அடைபடும்
எனும்
நம்பிக்கையில்
நோன்பிருக்கும்
காலமிது.

நோன்புக் கஞ்சி
வயிறு
வந்து
சேருமுன்னே
இருப்பிடங்கள்
யாவற்றையும்
இடித்து நொறுக்கியது
அரச பயங்கர
இயந்திரம்.

அரசைப்போலவே
அதுவும்
அன்பு
கருணை
நட்பு
இரக்கம்
எனும் குணம்
ஏதுமற்றது.

புல்டோசர்
என்பது
அரசின்
குறியீடாக
மாறி
 விட்டது.

ரமலான்
நோன்பு
சைத்தானுக்கு
விலங்கிட்டு
நரகத்தின்
கதவுகள்
அடைபடும்
என்று
நம்பிய
திருநபியின்
மொழியை 
நொந்து நிற்கிறார்கள்.

வருடந்தோறும்
நிகழும்
சாத்தானின்
நரகத் துயர்
ரமலானிலாவது
நிறுத்தப்படாத
என
சிறகடித்து
துன்புற்று
பறக்கின்றன
அல்லாகோவில்
புறாக்கள்