திருப்பூர், ஜூலை 29 - திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 3 லட்சத்து 35 ஆயி ரத்து 717 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச் சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். பல்லடம் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.40.90 லட் சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத் தின் விண்ணப்பம் பதிவு மையங்க ளையும் அமைச்சர் சாமிநாதன் சனி யன்று ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டத்தில் முதற் கட்டமாக கடந்த 24ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-1 மற்றும் மண்டலம்-2 ஆகிய பகுதிக ளுக்குட்பட்ட 30 வார்டுகளிலும், திருப் பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 265 ஊராட்சிகளில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடை பெறுகிறது
. முதல்கட்டமாக நான்கு நாட்களில் மொத்தம் 3 லட்சத்து 35 ஆயிரத்து 717 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருப் பூர் மாவட்டத்தில் 1,135 நியாய விலைக் கடைகளில் 8,18,344 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கலை ஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 827 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 5 லட்சத்து 34 ஆயிரத்து 460 குடும்ப அட்டைதாரர்க ளுக்கு விண்ணப்ப பதிவு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வரு கிறது. இரண்டாம் கட்டமாக, 308 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 2 லட் சத்து 83ஆயிரத்து 884 குடும்ப அட்டை தாரர்களுக்கு விண்ணப்ப பதிவு செய் யும் பணிகள் ஆகஸ்ட் 5 முதல் 16.ஆம் தேதி வரை திருப்பூர் மாநகராட்சி மூன்று, நான்கு மண்டலங்களுக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும், 6 நக ராட்சி பகுதிகளிலுள்ள 147 வார்டுக ளிலும் மற்றும் 15 பேரூராட்சிக ளுக்குட்பட்ட 233 வார்டுகளிலும் நடை பெறும். இந்த விண்ணப்பபதிவு முகாம்கள் பொது மக்களின் வசதிக் கேற்ப அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலைக்கடை அருகில் உள்ள அரசு அலுவலக கட்டடங்கள், சமு தாய நலக்கூடங்கள் மற்றும் பள்ளிக ளில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். இந்த ஆய்வின்போது, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறுஸ்துராஜ் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாரா யணன், பல்லடம் வட்டாட்சியர் ஜெய் சிங் சிவக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.