districts

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி

சேலம், பிப்.27- பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிறுமி பாதிக்கப்பட்ட வழக்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நேரடி தலையீட்டால், குற்றச் செயலில் ஈடுபட்ட நால்வரில் இரு வரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறு வன் ஆகிய இருவரும். 16 வயது சிறு மியை பாலியல் வன்கொடுமை செய்த ததாக கூறப்படுகிறது. அதனை செல் போனில் வீடியோ எடுத்து இரண்டு நண்பர்களுக்கு அனுப்பி உள்ளனர். பிறகு நான்கு பேரும் சிறுமியை கூட்டு  பாலியல் வன்கொடுமை செய்துள்ள னர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பான தகவ லறிந்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் அப்ப குதிக்கு நேரில் சென்று கேட்டறிந்த னர். மேலும், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண் டனர். மேலும் பாதிக்கப்பட்ட மாண வியின் பெற்றோரும் இது சம்பந்தமாக புகார் அளித்திருந்தனர்.  இந்நிலையில், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்து, பதிவுசெய்த செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய் யப்பட்ட இரண்டு சிறுவர்களுக்கும் 18 வயது பூர்த்தியாகாததால், சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். மீதமுள்ள இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சேலம் மாவட்டச் செயலாளர் மேவை சண்முகராஜா தலைமையில் ஓமலூர் தாலுகா செயலாளர் ஈஸ்வ ரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.கவிதா  உள்ளிட்ட தலைவர்கள் பாதிக்கப் பட்ட சிறுமியின் ஊருக்கு நேரில்  சென்று விசாரித்து உரிய தலையீடு  செய்ததால் குற்றவாளிகள் கைது செய் யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.