தாராபுரம், ஆக.5 – தாராபுரம் அருகே உரிய அனுமதி யின்றி செம்மண் பாரம் ஏற்றி வந்த 9 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த சிலநாட்களாக எந்தவித அனுமதி யுமின்றி இரவு பகலாக செம்மண் கொள் ளையடிக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தாராபுரம் வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக அரசு அனுமதியின்றி (பர்மிட்) தினந்தோறும் உள்ளூர் மற்றும் கேரளாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் செம்மண் கொள்ளை யடிக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வட்டார போக்குவரத்துதுறையி னர் அதிக பாரம் ஏற்றி சென்ற கேரள பதிவெண் கொண்ட இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் உப் புதுறைபாளையம் பழனிரோடு பகுதி யில் துலுக்கனூர் அருகே உரிய அனு மதியின்றி (பர்மிட்) முறைகேடாக செம் மண் ஏற்றி வந்த கேரள பதிவெண் கொண்ட 9 லாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். இதையடுத்து லாரிகளை ஓட்டி வந்த ஒட்டுநர்கள் லாரிகளை நிறுத்திவிட்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து தாராபுரம் வருவாய்துறையினருக்கும், காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் வட் டாட்சியர் ஜெகஜோதி, காவல் ஆய்வா ளர் மணிகண்டன் ஆகியோர் விசா ரணை நடத்தினர். பின்னர் லாரிகள் பறி முதல் செய்யப்பட்டு தாராபுரம் கோட் டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக் கப்பட்டது. வருவாய்துறையினரிடம் புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப் படும் என காவல்துறையினர் தெரிவித் துள்ளனர். பிடிபட்ட லாரிகளின் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் ஆகும். இதுகுறித்து பொதுமக்கள் தெரி விக்கையில், கடந்த சில நாட்களாக இரவு பகலாக நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் எந்த விதிமுறையுமின்றி செம்மண் கடத்தி செல்லப்படுகிறது. மேலும் செம்மண் கொள்ளையர்கள் போலியான பர்மிட்டுகளை அச்சிட்டு அதை வைத்துக்கொண்டு செம்மண் கொள்ளை நடக்கிறது. இதனால் அர சுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு முறைகேடாக கனிமவளம் சுரண்டப் படுகிறது. இதுகுறித்து கனிமவளத் துறை, வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிக ளுக்கு தெரிந்திருந்தும் கண்டும் காணா மல் இருப்பது சந்தேகமளிக்கிறது. மேலும் தற்சமயம் பறிமுதல் செய் யப்பட்டுள்ள 9 லாரிகள் மீது இன்னும் வழக்குபதிவோ, நடவடிக்கையோ எடுக்காததும் சந்தேகமாக உள்ளது. சமீ பகாலமாக இதுபோன்று பறிமுதல் செய் யப்படும் லாரிகள் கோட்டாட்சியர் அலு வலகத்தில் சில நாட்கள் நிறுத்தி வைக் கப்படுவதும், பின்னர் உரிய ஆவணங் கள் இருப்பதாக கூறி விடுவிக்கப்படு வதும் வாடிக்கையாகியுள்ளது. என தெரிவித்தனர்.