திருப்பூர், ஏப். 24 - திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் அலகுமலை யில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் ஏற்பாடுகள் குறித்து திருப் பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் நேரில் ஆய்வு மேற்கொண் டார். திருப்பூர் மாவட்டம் அலகு மலையில் பொங்கல் பண்டி கையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாக நீதிமன்ற வழக்குகளுக்கு பின்னர் இன்று நடைபெற உள்ளது. இதற்காக அலகுமலை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விழா மேடை மற்றும் 5 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கும் வகையில் அரங்குகள் அமைக் கப்பட்டுள்ளன. மேலும் மாடு பிடி வீரர்கள் அடிபடாமல் இருக்க தென்னை நார் பரப்பி மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் போட்டியை துவக்கி வைக்கிறார். அசம்பாவி தங்களை தவிர்க்க, 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர். பொது மருத்துவ குழு மற்றும் கால்நடை மருத்து வர்கள் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அலகுமலையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடு கள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் திங்க ளன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.