நாமக்கல், செப்.2- நாமக்கல் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 47 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், வெண் ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், தங்க சாலை தனியார் திருமண மண்ட பத்தில் தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகள் மூலம் மாற் றுத்திறனாளிகளுக்கு வழங்கப் படும் நலத்திட்ட உதவிகள் பெறு வதற்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச. உமா, நாடாளுமன்ற மாநிலங்க ளவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தனர். இந்த மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத் துவ பரிசோதனைகள் வழங்கப்படு வதை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், 7 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.47,880 மதிப் பில் இலவச தையல் இயந்திரம், 17 பேருக்கு அடையாள அட்டை, தமிழ்நாடு ஊரக வாழ்வதாரம் சார்பில் பெட்டி கடை அமைக்க ஒருவருக்கு ரூ.3 லட்சம் நிதியுத வியும், இருவருக்கு விசைத்தறி அமைக்க ரூ.6 லட்சம் நிதி உதவி, ஆடு வளர்ப்பு தொழில் மேற் கொள்ள 2 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.20,000 மதிப்பில் நிதி உதவி என மொத்தம் 47 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.6.24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி களை வழங்கினார். இந்நிகழ்வில் அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் திரளானோர் பங்கேற்றனர்.