districts

img

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தலித் மக்கள் வாக்களிப்பதை தடுத்து வன்கொடுமை

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தலித் மக்கள் வாக்களிப்பதை தடுத்து வன்கொடுமையில் ஈடுபட்ட சாதிய ஆதிக்க சக்திகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும் திங்களன்று (ஏப்.29) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு க.பீம்ராவ் தலைமை தாங்கினார். முன்னணியின் மாநில தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் 

தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;