தருமபுரி, பிப்.13- மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவ லர் சங்கத்தினர் உண்ணாவிரத இயக் கத்தில் ஈடுபட்டனர். துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்ததின் காரணமாக பாதிக்கப்பட் டுள்ள பட்டதாரி அல்லாத அலுவ லர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை உடனே வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரி டர் மேலாண்மைத்துறை அலுவலர் களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவ லர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதி யம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து வட்டங்களி லும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வாட்டாட்சியர் பணியி டங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி செவ்வாயன்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவ லர் சங்கத்தினர் உண்ணாவிரத இயக் கத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற இந்த இயக்கத்திற்கு, சங்கத் தின் மாவட்டத் தலைவர் எம்.கண் ணன் தலைமை வகித்தார். முன்னாள் மாநிலத் தலைவர் டியூக் பொன்ராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜீவ் காந்தி, ஜே.சிவக்குமார், அன்பு, மாவட் டப் பொருளாளர் நாகவேணி, மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்குமார், அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற உண்ணாவிரத இயக்கத் திற்கு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் இ.ஆர்.பிரபு தலைமை வகித்தார். அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் பி. சுரேஷ் துவக்க உரையாற்றினார். இதில் வருவாய்த்துறை அலுவலர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் ஏ.பி.செல்வராஜ், மத்திய செயற்குழு உறுப்பினர் அ.அருள் பிரகாஷ், மாநிலத் துணைத்தலைவர் கே.அர்த்தனாரி, மாவட்ட இணைச்செயலாளர் மா அகிலன், மாவட்டப் பொருளாளர் மா. முருகபூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.