districts

அனுமதியின்றி மாணவர்களை ஏற்றி வந்த வாகனம் சிறைப்பிடிப்பு

சேலம், செப்.20- எடப்பாடி அருகே அனுமதியின்றி பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த தனி யார் வாகனத்தை போக்குவரத்து அதி காரிகள் சிறைபிடித்தனர். சேலம் மாவட்டம், எடப்பாடி மற்றும்  அதன் சுற்றுவட்டார பகுதியில் சில தனி யார் வாகனங்கள் அனுமதியின்றி பள்ளி  குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச்செல்வதாகவும், இதனால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சங்ககிரி போக்குவரத்து துறை அலுவ லர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எடப்பாடி, கொங்கணா புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் போக்குவரத்து துறை அலுவலர் கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வரு கின்றனர். அதன்படி வட்டார போக்கு வரத்து அலுவலர் சுப்பிரமணியம் மற் றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் செந் தில்குமார், புஷ்பா ஆகியோர் தலைமை யில் தனித்தனி குழுக்களாக பல்வேறு  இடங்களில் ஆய்வு அதிகாரிகள் மேற் கொண்டு வருகின்றனர். இதன்ஒருபகு தியாக ஜலகண்டாபுரம் - சின்னப்பம் பட்டி பிரதான சாலையில் போக்குவ ரத்து அலுவலர்கள் திடீர் வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு தனியார் வேன் ஒன்று உரிய அனு மதியின்றி அப்பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகளை அதிகளவில் ஏற்றி வந் ததை கண்டறிந்த போக்குவரத்து துறை யினர் வாகனத்தை மடக்கி பிடித்தனர். இதைத்தொடர்ந்து வாகன உரிமை யாளர் மற்றும் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநரிடம் ஆய்வாளர்கள் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் இதுபோன்று உரிய அனு மதியின்றி தனியார் வாகனங்கள் பள்ளி  மாணவர்களை ஏற்றிச்செல்வது கண்ட றியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என போக்கு வரத்து துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.