சேலம், ஆக.11- காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தை நிலத்தினுள் குழாய் பதித்து கொண்டு செல்ல வேண்டுமென தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளிக்கப்பட்டது. காவிரி சரபங்கா நீரேற்று திட்டப் பணிகள் நடை பெற்று வருகிறது. இது சில பகுதிகளில் திறந்த கால்வாய் களாகவும், சில இடங்களில் நிலத்தினுள் குழாய் பதித்து செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேட்டூர் வட்டம், சூரப்பள்ளி கிராமம் பொய்யானூர் பகுதி மற்றும் ஆவடத்தூர் கிராமம் சவுரியூர் பகுதியில் விவசாயிகள் விளை நிலங்களிலும் மற்றும் வீட்டுமனையிலும் திறந்த கால்வாய் மூலம் அமலாக் கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் திறந்தவெளி கால்வாய்க்கு பதிலாக நிலத்தினுள் குழாய் மூலமாக அல்லது சாலை வழி யிலோ இத்திட்டத்தை அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோபோல், சேலம் மாவட்டம், பூலாம்பட்டி முதல் ஆடையூர் வரை உயர்மின் கோபுர அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மனு அளித்தனர். மேலும், சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டத் திற்குட்பட்ட பூலாம்பட்டி முதல் ஆடையூர் வரை 31 உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, தற்போது மின் விநியோகம் நடைபெற்று வருகிறது. இதனால் பாதிப்புக்கு உள்ளான 243 விவசாயிகளின் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது விளைநிலத்திற்கான இழப்பீடு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இழப்பீடு மிக மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஒன்றிய அரசின் நில எடுப்பு சட்டத்தின் படி இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.ராமமூர்த்தி தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு ஆகியோர் மனு அளித்தனர்.